states

பொதுத்துறைகளை சூறையாடும் மோடி அரசு

புதுதில்லி, மார்ச் 9- பொதுத்துறை நிறுவனங்களை தனியா ருக்கு தாரை வார்த்து வரும்மோடி அரசு, தற்போது எல்ஐசியையும் தனியாருக்கு விற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு கிறது. இதற்கு எல்ஐசி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங் களை நடத்தி வருகின்றனர்.  பொதுநிதிநிலை அறிக்கையின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஏர் இந்தியா நிறுவனத்தைப் போல எல்ஐசி பங்குகளும் தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என்றுகூறியிருந்தார். அதைத்தொடர்ந்து, முதல்கட்டமாக பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சியில் ஒன்றிய அரசுக்கு சொந்தமான 5 சதவீத பங்குகளை, விற்பனை செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.  இதன்மூலம் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் கோடி வரை நிதி திரட்டி, நிதிப்பற்றாக்குறையைக் குறைக்க உள்ளதாக ஒன்றிய  அரசு கூறிக் கொள்கிறது. 5 சதவீத  பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்ட நிலை யில், அதற்கான வரைவு திட்ட அறிக்கையை  எல்ஐசி நிறுவனம் செபியிடம் கடந்த பிப்ர வரி 12 ஆம் தேதி தாக்கல் செய்திருந்தது. இதற்கு செபி அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம், எல்ஐசி நிறுவனம் 31,62,49,885 பங்குகளை விற்பனை செய்ய உள்ளது.