states

img

ரூ.23 ஆயிரம் கோடி மோசடி நிறுவனத்துடன் மோடி அரசுக்கு தொடர்பு?

மும்பை, பிப்.14- இந்தியாவின் முன்னணி தனியார் கப்பல் கட்டுமானம் மற்றும் பழுது நீக் கும் நிறுவனமாகத் திகழ்வது, ஏபிஜி ஷிப்யார்டு லிமிடெட் எனப்படும் கப்பல் கட்டும் தளம் (ABG Shipyard Limited -ABGSL) ஆகும். குஜராத், கோவாவில் கப்பல் கட்டுமானம் தளம் மற்றும் பழுது பார்க்கும் தளத்தை வைத்தி ருந்தாலும், மும்பையை தலைமையிட மாகக் கொண்டு இயங்கி வருகிறது.  இந்நிலையில்தான், ஏபிஜி ஷிப் யார்டு நிறுவனம் 28 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் சுமார் 22 ஆயி ரத்து 842 கோடி ரூபாய் அளவிலான தொகையைக் கடனாகப் பெற்று மோசடி செய்ததாக சிபிஐ தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளது.  இந்நிறுவனத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநரான ரிஷி கமலேஷ் அகர்வால் மற்றும் இந்நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளான சந்தானம் முத்துசாமி, அஷ்வினி குமார், சுஷில் குமார் அகர்வால், ரவி விமல் நெவெ டியா ஆகியோர் வழக்கில் சேர்க்கப் பட்டுள்ளனர்.  மேலும், சிபிஐ அமைப்பானது,

கடந்த சனிக்கிழமையன்று குஜராத் மாநிலம் சூரத், பரூச், மும்பை, புனே ஆகிய பகுதிகளில் இருக்கும் இந்நிறு வன அதிகாரிகளுக்குச் சொந்தமான 13 இடங்களில் சோதனை நடத்தி, வங்கிக் கடன் மோசடி தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி 2019 நவம்பர் மாதம் அளித்த புகா ரின் பெயரில் விசாரணை துவங்கப் பட்டு. அதில் கடன் மோசடி உறுதி செய்யப்பட்ட நிலையிலேயே மேற் பண்ட நடவடிக்கைகளை சிபிஐ மேற் கொண்டுள்ளது. மேலும், எஸ்பிஐ வங்கி தலைமையில் 28 வங்கிகள் இணைந்து இந்நிறுவனத்திற்குக் கொடுத்த கடனை திரும்ப வசூ லிக்கப் புதிய குழு ஒன்றையும் உரு வாக்கியுள்ளன.

 ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம், அதன் 22 ஆயிரத்து 842 கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடியில் ஐசிஐசிஐ வங்கிக்கு மட்டும் அதிகபட்சமாக ரூ. 7 ஆயிரத்து 89 கோடியும், ஐடிபிஐ வங்கிக்கு ரூ. 3 ஆயிரத்து 639 கோடியும், ஸ்டேட்  வங்கிக்கு ரூ. 2 ஆயிரத்து 925 கோடியும், பேங்க் ஆப் பரோடாவுக்கு ரூ. ஆயி ரத்து 614 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ. ஆயிரத்து 244 கோடியும் வழங்க வேண்டும்.  இந்நிலையில், ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம் மீது 2018-ஆம் ஆண்டே மோசடி புகார்கள் அளிக்கப்பட்டும், அதன்மீது மோடி அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார். இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் ஒன்றிய பாஜக அர சுக்கு நெருக்கமானவர்கள் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். “வங்கி கடனை வாங்கி செலுத்தா தவர்களான நீரவ்மோடி, மெகுல் சோக்‌ஷி, லலித் மோடி, விஜய் மல் லையா, ஜதீன் மேத்தா, சேத்தன் சந்தீ சாரா ஆகியோர் பட்டியலில் தற்போது ரிஷிகமலேஷ் அகர்வால் இணைந் துள்ளார். 2018-ம் ஆண்டே ஏஜிபி நிறு வனம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் பகிரங்கமாக அறிவித்தது. ஆனால், ஏஜிபி நிறுவனம் மீது நட வடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு ஏன் ஐந்து ஆண்டுகள் ஆனது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

 மேலும், ரூ.23 ஆயிரம் கோடி வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டுள்ள ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம், 2007-ஆம் ஆண்டு குஜராத்தில் கப்பல் கட் டும் தளம் அமைப்பதற்காக 1 லட்சத்து 21 ஆயிரம் சதுரமீட்டர் நிலம் ஒதுக்கப் பட்டுள்ளது. அப்போது, குஜராத்தின் முதல்வராக இருந்தவர் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடிதான் என்ற  உண்மையையும் ரன்தீப் சிங் சுர்ஜே வாலா தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.  “சுதந்திரம் கிடைத்த 75 ஆண்டு களில் இந்தியாவின் மிகப் பெரிய வங்கிக் கடன் மோசடி நடைபெற்றுள் ளது. கடந்த 2007-ஆம் ஆண்டு குஜ ராத்தில் பாஜக ஆட்சியின்போது ஏபிஜி ஷிப்யார்ட் நிறுவனத்துக்கு 1.21 லட்சம் சதுர மீட்டர்கள் பரப்பளவு கொண்ட நிலம் ஒதுக்கப்பட்டது. அதன் ஒரு சதுர மீட்டர் விலை ரூ. 1,400-ஆக இருந்த நிலையில், ஒரு சதுர மீட்டர் ரூ.700-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை அப்போதைய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) சுட்டிக்காட்டினார். இதுமட்டு மின்றி தஹேஜிலும், ஏபிஜி ஷிப் யார்டுக்கு 50 ஹெக்டோ் நிலத்தை ஒதுக்க அப்போதைய குஜராத் அரசு  நடவடிக்கை மேற்கொண்டது” என்று அவர் கூறியுள்ளார்.