திருவனந்தபுரம், அக்.29- வேலை குறித்த கருத்துகள் மாறிவரும் புதிய காலகட்டத்தில், பட்டி யல் சாதியினர் மற்றும் பழங்குடி யினருக்கு காலத்துக்கேற்ற வேலை வழங்க வேண்டும் என்று கேரள தேவசம் அமைச்சர் கே.ராதா கிருஷ்ணன் கூறினார். பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடி யினரைச் சேர்ந்த படித்த வேலை தேடு பவர்களுக்காக கேரள அறிவுப் பொரு ளாதார இயக்கம் நடத்தும் உன்னதி விக்யான் பிரபாஸ் திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் பேசி னார். அப்போது அவர் மேலும் கூறுகை யில், மிக அதிக கவனம் செலுத்த வேண்டிய அடித்தட்டு மக்களை முன்னோக்கி கொண்டு வர, உன்னதி வேலை வாய்ப்பு திட்டம் பயனுள்ள தாக இருக்கும். இத்திட்டம் இந்த சமு தாயத்தின் மேல் படியாக உள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை யை மேம்படுத்த, அவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இந்த அரசு வந்த பிறகு வெளி நாட்டுப் பல்கலைக் கழகங்களிலும், இந்தியாவின் முக்கியமான கல்வி நிறுவனங்களிலும் படிக்கும் வாய்ப்பு எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்குக் கிடைத்துள்ளது. படிப்பை முடித்து விட்டுத் திரும்புபவர்களுக்கு அது தொடர்பான வேலைகளைப் பெறு வதற்கு உயர்கல்வி வாய்ப்புகளை அளிக்கும். வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்வதுடன் தொழில் வழங்குனர்களாகும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
10 ஆயிரம் அறிவார்ந்த வேலைகள்
உன்னதி தொழிலாளர் திட்டம், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடி யினர் மேம்பாட்டுத் துறையின் கீழ் கேரள அறிவுப் பொருளாதார இயக்கம் மற்றும் உன்னதி கேரளம் அதிகாரமளிக்கும் சங்கத்துடன் இணைந்து செயல்படுத்தப் படுகிறது. 18 முதல் 59 வயதுக்குட்பட்ட, பிளஸ் டூ அல்லது அதற்கு மேல் கல்வித் தகுதி உள்ள, வேலையில் ஆர்வமுள்ள எஸ்சி மற்றும் எஸ்டி வேலை தேடு பவர்களுக்கு பயிற்சி மூலம் வேலை வாய்ப்பைக் கண்டுபிடித்து வழங்குவது இதன் நோக்கம். 2023செப்டம்பர் 1, முதல் 2024 மார்ச் 31, வரை இரண்டு லட்சம் புதிய பதிவுகள் மற்றும் 10,000 அறிவார்ந்த வேலை வாய்ப்புகளை பட்டியல் சாதி யினரிடமிருந்து உருவாக்குவதை அறிவுப் பொருளாதார இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 20,000 பதிவுகள் மற்றும் 1,000 வேலை வாய்ப்புகள் பட்டியல் பழங்குடி யினரிடமிருந்து இலக்கு வைக்கப் பட்டுள்ளன. தற்போது DWMS தளத்தில் வேலை வாய்ப்புக்காக 86,397 பட்டியல் சாதியினரும், 7,759 பழங்குடியினரும் பதிவு செய்துள்ள னர். மேற்கண்ட தகவலை நிகழ்ச்சி க்கு தலைமை வகித்த அறிவுப் பொரு ளாதார இயக்கத்தின் இயக்குநர் டாக்டர். பி.எஸ்.ஸ்ரீகலா கூறினார்.