புதுதில்லி, ஜுன் 14 - தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், “சென்னை அரசு தலைமை செயலகத்தில் உள்ள தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் அலுவலகத்தில் அம லாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு வன்மையான கண்டனங்கள். மோடி அரசு எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து அமலாக்கத்துறை எனும் ஆயுதத்தை ஏந்தியுள்ளது” என்று கூறியுள்ளார்.