புதுதில்லி, மார்ச் 10- மார்க்சிய சிந்தனையாளர், பேரா சிரியர் தோழர் அய்ஜாஸ் அஹமது புத னன்று அமெரிக்காவில் காலமானார். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த வருத்த த்தை தெரிவித்துக் கொண்டுள்ளது. அய்ஜாஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் . இந்தியா முழுவதும் எண்ணற்ற கருத்தரங்குகள், கூட்டங் களில் பங்கேற்றுள்ளார். அவர் மிகவும் மதிக்கப்படும் கோட்பாட்டாளராக இருந்தார். மார்க்சியத்தை பாது காக்கும் அவரது எழுத்துக்கள் தலை முறைகளை ஊக்குவிக்கும் உன்னத மானவை. விசா கட்டுப்பாடுகள் மற்றும் அவரது நோய் காரணமாக அவர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவ ரது மறைவு உலகம் முழுவதும் சோசலிசத்திற்காக போராடுபவர் களுக்கு மிகப்பெரிய இழப்பாகும் அவர் மார்க்சிஸ்ட் மற்றும் லெஃப்ட்வேர்டு புத்தகங்களுக்கு தனது பங்களிப்பை செலுத்தியுள்ளார். இந்துத்துவா வகுப்புவாதம், பாசிசம், மதச்சார்பின்மை மற்றும் உலகமய மாக்கல் குறித்தும் ஆய்வுசெய்துள் ளார். உலகம் முழுவதும் இடதுசாரி களுக்கான வாய்ப்புகள் குறித்தும் இந்திய சூழலில் இடதுசாரிகளின் வளர்ச்சி அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த அவரது கருத்தியல் போரா ட்டங்கள் எதிர்கால தலைமுறைகளுக்கு தொடர்ந்து வழிகாட்டும். அவரது குடும்பத்தினருக்கும், அவரது பிள்ளைகள் ரவி, ஆதில், அனு ராதா கல்ஹான் மற்றும் மொனீசா மற்றும் அவரது நண்பர்கள், தோழர் களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.