புதுதில்லி, ஜூலை 17- விவசாயிகள் சொல்வதைக் கேட்டு, அவர்களின் கருத்தைப் புரிந்து கொண்டால், நாட்டின் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என பிரதமர் மோடியின் பெயரைக் குறிப்பிடாமல் ராகுல் காந்தி அறிவுரை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக வெளி யிட்டுள்ள அறிக்கையில் ராகுல் காந்தி மேலும் கூறியிருப்பதாவது: விவசாயிகள் நேர்மையான வர்கள் மற்றும் விவேகமானவர் கள். அவர்கள் கடினமாக உழைக் கின்றனர். அதே நேரத்தில் உரிமை களை பெறவும் தெரியும். தங்க ளின் உரிமைகளுக்காக மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்தும், குறைந்தபட்ச ஆதார விலை உரி மைக்காகவும் அவர்கள் உறுதியாக போராடினர். விவசாயிகள் சொல்வ தைக் கேட்டு, அவர்களின் கருத் தைப் புரிந்து கொண்டால், நாட்டின் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். இந்தியாவை ஒருங்கிணைக்க விவசாயிகள் மிக முக்கிய பங்க ளிப்பை வழங்கி வருகின்றனர். அவர்கள் நாட்டின் அனைத்துப் பகு திகளிலும் விவசாயம் செய்கின்ற னர். சமீபத்தில் ஹரியானாவின் சோனிபட்டில், சஞ்சய் மாலிக் மற்றும் தஷ்பிர் குமார் என்ற இரு விவசாய சகோதரர்களை நான் சந்தித்தேன். அவர்கள் இருவரும் சிறுவயதிலிருந்தே நல்ல நண் பர்களாக இருந்துள்ளனர். பல ஆண்டுகளாக ஒன்றாக சேர்ந்து விவசாயம் செய்து வருகின்றனர். அவர்களிடம் பல விஷயங்களை சுதந்திரமாக ஆலோசித்தேன். அந்த கிராமத்தில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் என் மீது அதிக அன்பு செலுத்தினார்கள். என்னை அவர்களது குடும்பத்தில் ஒருவராக நினைத்து, அவர்கள் வீட்டில் செய்த உணவை எங்க ளுக்கு வழங்கினார்கள். இவ்வாறு ராகுல் காந்தி குறிப் பிட்டுள்ளார்.