states

“மெய்டே” தலைவர் மீது துப்பாக்கிச் சூடு

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த 7 மாதங்களாக வன்முறை அரங்கேறி வருகிறது. வன்முறையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200-ஐ நெருங்கும் நிலையில், உயிர் பிழைத்த பல ஆயிரம் மக்கள் சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். நாள்தோறும் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், ஆளும் பாஜக அரசு வன்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதாகக் கூறி வருகிறது.  இந்நிலையில், மெய்டே இனக்குழு தலைவரான  பிரமோத்குமார் லங்கோல் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வந்திருந்தார். அவரது கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றாலும், மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் மெய்டே இன மக்கள் மட்டுமே உள்ளூர் மக்கள் எனவும், குக்கி இன மக்கள் உடனடி யாக மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் எனவும் வன்முறை ஏற்படுத்தும் வகையில் பிரமோத்குமார் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.