states

img

நிதிஷ்குமாரை சமாதானம் செய்த மல்லிகார்ஜூன கார்கே!

பொதுக்கூட்டத்தில் ஒன்றில் பங்கேற்றுப் பேசிய பீகார்  முதல்வரும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி யின் தலைவருமான நிதீஷ் குமார், “ஒன் றிய அரசின் செயல்  பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘இந்தியா’ கூட்டணி உருவாகி யது. ஆனால், தற்போது  அந்தக் கூட்டணி யில் முன்னேற்றம் ஏற்  படவில்லை. ‘இந்தியா’ கூட்டணிக்குத் தலைமைப் பொறுப்பை காங்கிரஸ் ஏற்க  அனைத்துக் கட்சிகளும் ஒப்புக்கொண் டன. ஆனால், அக்கட்சி 5 மாநில பேரவைத் தேர்தலில் மும்முரமாக உள்ளது. 5 மாநில  தேர்தல் முடிந்த பின்புதான் காங்கிரஸ்  கட்சி ‘இந்தியா’ கூட்டணியின் அடுத்த கூட்  டத்தைக் கூட்டும் என நினைக்கிறேன்” என்று அதிருப்தி தெரிவித்திருந்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நிதீஷ்  குமாரை வெள்ளிக்கிழமை இரவு தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசியுள் ளார். அப்போது, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்ததும் இந்தியா கூட்டணி  குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று நிதீஷ்குமாரிடம் கார்கே உறுதிய ளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.