சிவசேனா எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி காங் கிரஸ்-தேசியவாத காங் கிரஸ்-சிவசேனா (யுடிபி) அரசை கவிழ்த்து மகாராஷ்டிரா வில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட் சிக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக தேசியவாத காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்து அஜித் பவார் ஆதரவு எம்எல்ஏக்கள் மூலம் ஜன நாயக சட்டவிரோத ஆட்சி மகா ராஷ்டிராவில் உள்ள நிலை யில், முந்தைய உத்தவ் தாக் கரே அரசு போதைப்பொருள் மன்னன் லலித் பாட்டீலுக்கு உதவியதாக மகாராஷ்டிர துணை முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டி னார். இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சிவசேனா (யுடிபி) மூத்த தலைவரும், எம்பி யுமான சஞ்சய் ராவத் கூறு கையில், “லலித் பாட்டீலுக்கும் சிவசேனாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. துணை முதல்வர் பட்னாவிஸிடம் முத லில் மாநில உளவுத்துறையை வலுப்படுத்தச் சொல்லுங்கள் இஸ்ரேல் கூட தனது உள வுத்துறை பலம் வாய்ந்தது என்று நினைத்தார்கள். நீங்க ளும் உங்கள் உளவுத்துறை பலம் வாய்ந்தது என்று நினைக் கிறீர்கள். ஆனால் உங்கள் பின்னால் என்ன நடக்கிறது என்று உங்களுக்கேத் தெரி யாது. இல்லையேல் ஹமாஸ் போன்ற சூழல் ஏற்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார். சிவசேனா (யுடிபி) கட்சியின் இந்த எச்சரிக்கை மகா ராஷ்டிரா அரசியலில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.