ஜி-20 நாடுகளின் 18 ஆவது உச்சி மாநாடு இந்தாண்டு இந்தியாவின் தலைமை யில் புதுதில்லியில் செப்டம்பர் 9-10 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதற்காக தில்லி முழுவதும் ஏற்பாடுகள் மும்முரமாக நடை பெற்று வருகின்றன. உச்சி மாநாட்டிற்கு முன்ன தாக நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட கூட்டங்களை ஒன்றிய அரசு நடத்தியது. இந்த நூற்றாண்டில் சர்வதேச அரசியல் தொடர் மாற்றங்களை சந்தித்து வருகிறது. இதை எதிர்கொள்ள அனைத்து நாடுகளின் குரலும் கேட்கப்பட வேண்டியது அவசியம். ஐநா விலும் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெற்குலக நாடுகளின் நம்பிக் கையை நிறைவேற்றும் பணியை இந்தியா மேற்கொள்ளும் ஜி-20 கூட்டமைப்பில் ஆப்ரிக்கா ஒன்றியம் நிரந்தர உறுப்பினராக இணைய இந்தியா ஆதரவளிக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தெருக்களிலும் வாழ அனுமதி இல்லை
20 நாடுகளின் பிரதிநிதிகள் உச்சி மாநாட்டில் பங்கேற்க இருக்கும் நிலையில் வெளிநாட்டு நண்பர்களின் கண்ணில் ஏழை எளிய மக்களின் வறுமை நிலை பட்டுவிடக் கூடாது என வறியவர்களை அடித்து துரத்தி வருகிறது ஒன்றிய அரசு. பல கோடிகள் ஒதுக்கப்பட்டு “அழகு படுத்தும் திட்டம்” என்பதன் மூலம் இந்த செப்படி வித்தைகளை செய்து கொண்டிருக்கி றது மோடி அரசு. 2023 ஜனவரி முதல் நூற்றுக் கணக்கான வீடுகள் மற்றும் சாலையோர கடைகள் இடிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் துரத்தப்பட்டுள்ளனர். பல குடியிருப்பா ளர்களுக்கு அவர்களின் வீடுகளை இடிப்ப தற்கு சில மணி நேரத்திற்கு முன்பு தான், அவர்கள் வெளியேற வேண்டும் என்கிற அறி விப்புகள் கொடுக்கப்பட்டன. ஆனால் அவர்க ளின் வீடுகள் இடிக்கப்பட்ட பிறகு அந்த மக்க ளுக்கு மாற்று ஏற்பாடுகள் எதையும் பாஜக அரசு செய்து தரவில்லை. இதனால் ஆயிரக்க ணக்கான மக்கள் வீடுகளை இழந்து, அதீத வறுமைக்குள் தள்ளப்பட்டு தெருவிலும் வாழ விடாமல் அவர்கள் துரத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் தலைநகர் தில்லியில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது 47,000 பேர் வீடற்ற வர்களாக இருந்தனர் என கூறப்பட்டது. அப் போதே இது உண்மையான மதிப்பீடு அல்ல என்றும் உண்மையான எண்ணிக்கை குறைந் தது 150,000 என்றும் சமூக ஆர்வலர்கள் கூறினர். ஒருபுறம் சர்வதேச அரசியலில் ஒடுக்கப் படும் நாடுகளின் குரல் கேட்கப்படவேண்டும் என்று கூறிக்கொண்டே மறுபுறம் சொந்த நாட்டு மக்களில் அவலக்குரலைக் கேளாமல் அலட்சியப்படுத்தி விட்டு சர்வ சாதாரணமாக கடந்து செல்கிறது மோடியின் பாஜக அரசு.