states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மியான்மர் நாட்டின் சின் மாநிலத்தில் உள்ள துய்புவல் சர்வதேச எல்லையில் கடந்த நவம்பர் 16 அன்று அந்நாட்டு ராணுவத்திற்கும், மக்கள் பாதுகாப்புப் படை என்ற போராளிக் குழு வுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் போராளிக் குழுக்களின் தாக்குதலை சமாளிக்க  முடியாமல் 29 மியான்மர் ராணுவ வீரர்கள் இந்திய  எல்லைப் பகுதியான மிசோரம் மாநிலத்திற்குள் தஞ்சம் புகுந்தனர். இந்நிலையில், இவர்களை ஞாயிறன்று மீண்டும் மியான்மர் நாட்டிற்கு அனுப்பி வைத்தது இந்திய ராணுவம்.

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  3 நாள் பயணமாக ஒடிசா, ஆந்திரம் ஆகிய  மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கி றார். இந்த சுற்றுப்பயணம் திங்களன்று தொடங்கு கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ள (BARC) குடியிருப்பில் 19 வயது கல்லூரி மாணவி குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுக்கப்பட்டு கூட்டு பாலியல் வனம்கொடுமை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் அஜித்குமார் யாதவ், பிரபாகர் யாதவ் என இருவரை போலீசார் கைது செய்தனர்.

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் அரை சத மடித்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 72 அரை சதமடித்து புதிய சாதனை படைத்தார் இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி.

நடிகை திரிஷா பற்றி நடிகர் மன்சூர் அலி கான் தெரிவித்த கருத்துக்கு தேசிய மகளிர்  ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என பாஜக வைச் சேர்ந்த நடிகை குஷ்பு தெரிவித்தார். 

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 10 பேர் உயிரிழந்த நம்பள்ளி தீ விபத்தில் அபார்ட்மெண்ட் உரிமையாளரை போலீசார் ஞாயிறன்று கைது செய்தனர்.

குஜராத் மாநிலம் வல்சாத் பகுதியில் ஜிஐடிசி என்ற கெமிக்கல் நிறுவனத்தில் ஞாயிறன்று ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பல  லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகி யுள்ளது. விடுமுறை நாளில் தீவிபத்து ஏற்பட்ட தால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

கர்நாடக மாநிலம்  பெங்களூரில் உள்ள ஹோப்பார்ம் சந்திப்பு அருகே சௌந்தர்யா என்ற 23 வயது பெண்ணும் அவரது 9 மாத மகள் சுவிக்ஷாவும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.