கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால்
ஒன்றிய அரசு அரசியல் பாரபட்சத்துடன் செயல் படுவது தெளிவாக தெரிகிறது. பேரிடருடன் கேரளம் வெள்ளத்தில் தத்தளித்த போது வெளி நாட்டு நிதிகளுக்கு அனுமதி மறுத்துவிட்டது. ஆனால் மகாராஷ்டிராவிற்கு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது ஒன்றிய அரசு. கேரளாவின் உரிமைகளை தொடர்ச்சியாக ஒன்றிய அரசு மறுக்கிறது.
ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி
பீகார் மக்களை பற்றி பாஜக - ஜேடியு அரசாங்கம் கவலைப்படுவதில்லை. அதனால் தான் முசாபர்பூரில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொலை செய்யப்பட்டும், சிகிச்சை இன்றியும் உயிரிழந்துள்ளார். ஆரோக்கியம், சட்டம்-ஒழுங்கு, கல்வி முறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முழுமையாக தோல்வியடைந்துள்ளது.
பீகார் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் ராம்
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 9 வயது சிறுமி சிகிச்சைக்கு இடம் கிடைக்காமல் பாட்னா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக பாஜக எம்எல்சி,”ஒரு நோயாளி யை சேர்க்க கங்கையில் மற்றவர்களை தூக்கி எறியவா? என மனிதாபிமான மற்ற முறையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிபிஐ எம்.பி., சந்தோஷ் குமார்
பஹல்காமில் என்ன நடந்தது? தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் எங்கே? இந்த 2 கேள்விகளுக்கு பதில் இல்லாமல் நாம் முன்னேற முடியாது. பயங்கரவாதத்தை எதிர்க்க முழு ஆதரவு தருகிறோம். ஆனால் நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அமர்வு கூட்டப்பட வேண்டும்.