கெஜ்ரிவாலுக்கு 7 ஆவது முறையாக சம்மன்
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத் திற்கு வர முடியாதபடி செய்ய மத்திய அமைப்புகள் மூலம் “இந் தியா” கூட்டணி தலைவர்களுக்கு மோடி அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. ஏற்கெனவே “இந்தியா” கூட்டணி யில் அங்கம் வகிக்கும் ஜேஎம்எம் கட்சி யின் தலைவரும், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரனை அம லாக்கத்துறை மூலம் சிறையில் அடைத் தது போல, தற்போது ஆம் ஆத்மி தலை வரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை மூலம் கைது செய்ய மோடி அரசு துடியாய்த் துடித்து வருகிறது. இந்நிலையில், தில்லி மதுபான கொள்கை வழக்கில் தொடர்பு உள்ளதாக கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 6 முறை சம்மன் அனுப்பியது. அம லாக்கத்துறையின் 6 சம்மனும் சட்டவிரோ தமானது எனக் கூறி சம்மன்களை புறக்க ணித்த நிலையில், வியாழனன்று 7-ஆவது முறையாக கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. சம்மனில் பிப்.26-ஆம் தேதி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக வேண் டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
ஹரியானா மாநிலத்தில் பாஜக-ஜேஜேபி கூட்டணி ஆட்சி நடை பெற்று வரும் நிலையில், முதல் வராக பாஜகவின் மனோகர் லால் கட்டார் உள்ளார். இந்நிலையில், பாஜக கூட்டணி ஆளும் ஹரியானா அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துவிட்ட தாக குற்றம்சாட்டி, தற்போது நடை பெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் (காங்கிரஸ்) பூபிந் தர் சிங் ஹூடா, கட்டார் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். இந்த நம்பிக்கையில்லா தீர்மா னத்தை சட்டமன்ற சபாநாயகர் கியான் சந்த் குப்தா ஏற்றுக்கொண்ட நிலையில், வியாழனன்று விவாதத்திற்கு அனுமதி வழங்கினார்.
சட்டப்பேரவையில் அதிமுக - பாமக வெளிநடப்பு
சென்னை,பிப்.22- தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு, காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோபத்துடன் பேசினார். எடப்பாடி பழனிசாமியின் புகாருக்கு அவை முன்னர் துரைமுருகன் பதில் அளித்தார். அப்போது அவர், காவிரி ஆணையம் கூடாததால் அதிமுக ஆட்சியில் பிரச்சனை வரவில்லை என கூறினார். இதையடுத்து, மேகதாது விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் அளித்த பதிலில் திருப்தி இல்லை எனக்கூறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அவை நிகழ்வுகளை முழுமையாக புறக்கணித்தனர். சாதிவாரி கணக்கெடுப்பு பாமக சட்டமன்ற குழுத் தலைவர் ஜி.கே. மணி சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தொடர்ந்து பேச முயன்றார். ஆனால், பேரவைத் தலைவர் அனுமதிக்கவில்லை. இதனால் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, முதலமைச்சர் விளக்கம் அளித்தார். ஆனால் அதை ஏற்காமல் பாமக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளி நடப்பு செய்தனர். பிறகு, அவை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.