states

img

பிரதமர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற ஆம் ஆத்மி தலைவர்கள் கைது

மதுபானக் கொள்கை வழக்குத் தொடர்பாக தில்லி முதல்வர் அர விந்த் கெஜ்ரிவால் கடந்த வாரம்  கைது செய்யப்பட்டார். இதனை  கண்டித்து ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் கடந்த 5 நாட்களாக தில்லியில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். செவ்வா யன்று பிரதமர் இல்லத்தை முற்றுகையிட போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு வெளி யிட்டது. அறிவித்தது போலவே பிரதமர் இல்லத்தை நோக்கி ஆம் ஆத்மி தலைவர்கள், தொண்டர்கள் புறப்பட்டனர்.  இந்த முற்றுகை போராட்டத் திற்கு ஒன்றிய உள்துறை  அமைச்சர் அமித் ஷாவின் நேரடி  கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல்துறை அனுமதி மறுத்து,  பல்வேறு இடங்களில் தடுப்பு களை அமைத்தது. இருப்பினும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய  தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் பிரதமர் இல்லம் மற்றும் பாஜக தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.  இங்கு போராட்டம் நடத்தக்  கூடாது, கலைந்து செல்லுங்கள், இல்லையென்றால் மோசமான  பின்விளைவை சந்திக்க நேரிடும்  என தில்லி காவல்துறை மிரட்டல் விடுத்தது. ஆனால் மிரட்டலைக் கண்டுகொள்ளாமல் ஆம் ஆத்மி  கட்சியினர் தொடர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனால், குண்டுக்கட்டாக தூக்கி, தரதர வென இழுத்து ஆம் ஆத்மி கட்சி யினரை கைது செய்தது தில்லி  காவல்துறை. முடங்கியது பிரதமர் இல்ல பகுதி ஆம் ஆத்மி கட்சியினரின் போராட்டத்தால் முக்கிய சாலை களை மூடி, பிரதமர் இல்ல  சாலை மற்றும் பாஜக அலுவல கங்களில் துணை ராணுவப் படை குவிக்கப்பட்டது. தில்லி முழுவதும் அறிவிக்கப்படாத 144 தடை உத்தரவு அமல்படுத் தப்பட நிலையில், லோக் கல்  யாண் மார்க், படேல் சௌக்  (கேட் எண் 3), மத்திய செயலகம்  (கேட் எண் 5) ஆகிய மெட்ரோ நிலையங்களும் மூடப்பட்டன.

அமலாக்கத்துறையை  அதிரச் செய்த கெஜ்ரிவால் இரண்டாவது உத்தரவை பிறப்பித்தார்

அமலாக்கத்துறை காவலில் இருக்கும் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடியே மாநில  நிர்வாகப் பணியை மேற்கொண்டு வருகிறார். 3 நாட்களுக்கு  முன் தில்லி மாநிலத்தின் குடிநீர் மற்றும் கழிவுநீர் பிரச்சனை யை சரி செய்யுமாறு உத்தரவிட்டதாக அம்மாநில அமைச்சர்  அதிஷி கூறினார்.  இந்நிலையில், செவ்வாயன்று மருத்துவக் கட்டமைப்பை சரிசெய்ய வேண்டும் என்றும், மொகல்லா கிளினிக்குகளில் இல வச மருந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சவுரப் திவாரிக்கு உத்தர விட்டுள்ளார். கெஜ்ரிவாலை ஒடுக்க மோடி அரசு அமலாக் கத்துறை மூலம் சிறையில் அடைத்து நெருக்கடி அளித்து வரு கிறது. ஆனால் சிறையில் இருந்தே தில்லி மாநில நிர்வாகப்  பணியை கவனித்து அமலாக்கத்துறை கண்ணில் விரலை விட்டு ஆட்டி வருகிறார் கெஜ்ரிவால்.