புதுதில்லி, மார்ச் 23- காஷ்மீர் மற்றும் அம்மாநில மக்களின் போராட்டம் தொடர்பான விஷயங்களில் நிபுணத்துவம் பெற்றவர் ஏ.எஸ். துலாத் எனப்படும் அமர்ஜித் சிங் துலாத் ஆவார். இந்திய உளவுத்துறை (Intelligence Bureau), ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (Research and Analysis Wing - R&AW) ஆகியவற்றுக்கு பொறுப்பு வகித் தவர். காஷ்மீர் விவகாரம் தொடர்பான பிர தமரின் ஆலோசகராகவும் இருந்துள்ளார். அவர், “‘தி காஷ்மீர் பைல்ஸ்’ ஒரு பிரச்சார திரைப்படம்” என்றும், “அது இரு துருவ மனநிலையை தூண்டுவதற்காக திட்டமிட்டு எடுக்கப்பட்டுள்ளது” என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: 1989 டிசம்பரில், உள்துறை அமைச்சர் முப்தி முகமது சயீத்தின் மகள் ருபையா சயீத் கடத்தப்பட்டார். அவரது விடுத லைக்கு ஈடாக, ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (The Jammu Kashmir Liberation Front - JKLF) பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டனர். அது ஒரே இரவில் காஷ்மீரின் அரசியல் வானிலையை மாற்றியது. ஒரே இரவில், மாநிலத்திற்கான சுதந்திரம் ஒரு மூலையில் உள்ளது என்று பல இளைஞர்கள் நம்பி னர். ஸ்ரீநகரில் தீபாவளியைப் போலவே கொண்டாட்டங்கள் இருந்தன. அதுவரை நாங்கள் (R&AW) ஊருக்குள் சுதந்திரமாக நடமாடினோம். நானும் மாநி லம் முழுவதும் பயணம் செய்தேன். ஆனால் ஐந்து பேர் விடுவிக்கப்பட்ட பிறகு, எல்லாம் கட்டுப்பாட்டை மீறியது, நிறைய இரத்தக் களரி இருந்தது.
இது எல்லாம் தொடங்கிய போது நான் அங்குதான் இருந்தேன். 1989- 90 குளிர்காலம் மிகவும் மோசமான கால மாக இருந்தது. கொலைகளைத் தொடர்ந்து வந்த மாதங்களில், இறப்பு எண்ணிக்கை அதிக மானது. மே 1990-இல், ஆயுதம் தாங்கிய கொலையாளிகள் மிர்வைஸ் மவுலவி முக மது பாரூக்கின் வீட்டிற்குள் நுழைந்து அவரை சுட்டுக் கொன்றனர். எனது குழுவில் இருந்த உளவுத்துறை அதிகாரிகள் நான்கு பேர் மூன்று வார இடைவெளியில் கொல் லப்பட்டனர். ஜம்மு - காஷ்மீர் காவல்துறை யின் சிறப்புப் பிரிவைச் சேர்ந்தவர்களை யும் பயங்கரவாதிகள் கொன்றனர். 1990-ஆம் ஆண்டு கொலைகள் நடந்த உடனேயே பண்டிட்டுகளின் வெளியேற்றம் தொடங்கியது. சமூகத்தில் அதிக வசதி படைத்தவர்கள் தில்லிக்கு சென்றனர். வேறு எங்கும் செல்ல முடியாதவர்கள் ஜம்முவில் அமைக்கப்பட்டிருந்த முகாம் களுக்குச் சென்றனர். காஷ்மீரி முஸ்லிம் களும் தில்லி போன்ற இடங்களுக்குப் புறப்பட்டனர்.
காஷ்மீரில் பண்டிட்டுகள் குறி வைக்கப்பட்டனர் என்பதில் எந்த சந்தே கமும் இல்லை. அதேபோல முஸ்லிம்களும் பலர் குறிவைக்கப்பட்டனர். இன்னும் சொல்லப்போனால், பண்டிட்டுகளை விட அதிகமான முஸ்லிம்கள் வெளியேறியுள்ள னர். காஷ்மீரிலேயே தங்கிய பண்டிட்டுகள் முஸ்லிம்களால்தான் பாதுகாக்கப்பட்ட னர். அவர்கள் பள்ளத்தாக்கில் தங்கினர். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட போது கூட, பண்டிட்டுகள் குறிவைக்கப்பட வில்லை இப்போதும்கூட பண்டிட்டுகள் திரும்பி வந்தால், அவர்களை முஸ்லிம்கள் பாது காக்க முயற்சிப்பார்கள். மாறாக, காஷ்மீர் பண்டிட்டுகளுக்கென தனியாக காலனி களை நிறுவுவது தவறான வழியாக இருக்கும். பண்டிட்டுகள் குறிவைக்கப்படு வதற்கு வசதியாக இருக்கும். இந்நிலையில்தான், 1990 கால கட்டத்தின் இரு துருவ மனப்பான்மையை ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் மீண்டும் தூண்டுவதாக உள்ளது. இது ஒரு பிரச் சாரப் படம். இவ்வாறு ஏ.எஸ். துலாத் குறிப்பிட் டுள்ளார்.