மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் முயற்சியில் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீர் மக்களிடையே நம்பிக் கையை ஏற்படுத்தும் வகையிலும் சுற்றுலாத்துறைக்கு உத்வேகமூட்டும் வகையிலும் பஹல்காம் பகுதியிலேயே அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா ஒரு சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடத்தியுள்ளார். ஜம்மு - காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பொறுப்பேற்ற பிறகு கோடைகால குளிர்கால தலைநகர்க ளான ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவுக்கு வெளியே அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டது இதுவே முதல் முறை யாகும். உள்ளூர் மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்த பஹல்காம் வந்ததா கவும், மீண்டும் இப்பகுதிக்கு சுற்றுலா விற்கு வரும் பயணிகளுக்கு நன்றி தெரி விக்கவும் இம்முடிவு எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அப்பகுதியில் சைக்கிள் பயணம் மேற்கொண்ட அவர் ஆற்றுப் பகுதிக்கு சென்று புகைப்படமும் எடுத்து பகிர்ந்துள்ளார்.
பதிவுத்துறை வரைவு மசோதா: ஒன்றிய அரசு கருத்துக் கேட்பு
பதிவுத் துறை வரைவு மசோதா 2025 குறித்து பொதுமக்களிடம் பரிந்துரைகள் மற்றும் கருத்துக் களை ஒன்றிய அரசு கோரியுள்ளது. இதுதொடா்பாக ஒன்றிய ஊரக வளா்ச்சித்துறை அமைச்சகம் வெளி யிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, காகிதப் பயன் பாட்டை குறைத்து இணையவழியில், நவீன பத்திரப் பதிவு முறைக் காக பதிவுத் துறை மசோதா 2025-இன் வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டம் இயற்றப்படு வதற்கு முன்பு கொண்டுவரப்பட்ட பதி வுத் துறைச் சட்டம் 1908-க்கு மாற்றாக ஒன்றிய ஊரக வளா்ச்சித்துறை அமைச்ச கத்தின் கீழ் செயல்படும் நில வளங்கள் துறை தயாரித்துள்ள இம்மசோதா இருக் கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 30
நாள்களுக்குள் கருத்து:
இந்த மசோதா மத்திய நில வளங்கள் துறையின் https://dolr.gov.in வலை தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள் ளது. அதுகுறித்து 30 நாள்களுக்குள் அதில் தங்கள் பரிந்துரைகள் மற்றும் கருத்துகளைப் பொதுமக்கள் தெரி விக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5 வயது சிறுமிக்கு கோயிலுக்குள் பாலியல் வன்கொடுமை
யோகி ஆதித்யநாத் தலை மையிலான பாஜக ஆளும் உத்தரப் பிரதே சத்தில் பெண்கள், தலித்களுக்கு எதிரான வன்கொடுமைகள்,பாலியல் வல்லுறவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அம்மாநிலத்தில் மே 18 அன்று கோயி லுக்குள் வைத்து 5 வயது சிறுமி ஒருவர் பாலி யல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடுமை தற்போது வெளிவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ராவில் ஜகதீஷ்புரா காவல் நிலை யப் பகுதியில் உள்ள தன் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறு மியை அருகே உள்ள கோயிலுக்குள் இழுத்துச் சென்று ஒருவர் பாலியல் வன்கொ டுமை செய்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த பாட்டியை அந்த நபர் கீழே தள்ளிவிட்டு ஓட முயன்ற நிலையில், அருகிலிருந்த மக்கள் அவரை மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள் ளனர். சிறுமியின் குடும்பத்தினர் புகார் அளித்த தன் அடிப்படையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அவரது அண்டை வீட்டை சேர்ந்த பவித்ரா என்ற கயவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.