பெங்களூரு, பிப்.19- இஸ்லாமிய மாணவிகள், ஹிஜாப் அணிவதைக் காரண மாக வைத்து, கர்நாடக கல்வி நிலையங்களில் ஏபிவிவி உள் ளிட்ட ஆர்எஸ்எஸ் பரிவாரங் கள் மத வன்முறையைத் தூண்டி வருகின்றன. இவ்விவகாரம், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் விசா ரணையில் இருக்கும் நிலை யில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்றால், இந்து மாணவ - மாண வியர் குங்குமம் உள்ளிட்ட மத அடையாளங்களை அணி வதும் தடை செய்யப்பட வேண் டும் என்ற விவாதம் முன்னுக்கு வந்துள்ளது. விஜயபுராவில் அரசு பிரி யுனிவர்சிட்டி கல்லூரியில் நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டு வந்த மாணவரை, கல்லூரி நிர்வாகம் வகுப்பறை யில் நுழைய அனுமதி மறுத்த தையொட்டி, ‘பஜ்ரங் தள்’, ‘ஸ்ரீராம் சேனா’ உள்ளிட்ட அமைப்புக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் செய்தியாளர் களுக்கு பேட்டி ஒன்றை அளித் துள்ளார். அதில், கல்வி நிலை யங்களில் குங்குமத்தையோ அல்லது ஹிஜாப்பையோ எதையுமே நீக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். “நாட்டின் அரசியல் சாசனத் தில் குழந்தைகள் கல்விக்கு சிறப்பு உரிமை உள்ளது. பள்ளி - கல்லூரி மாணவர்கள் கட்டாயக் கல்வி பெற உரிமை வழங்கப்பட்டுள்ளது. அவரவர் மத நம்பிக்கைகளை காக்க வும் உரிமை அளிக்கப்பட்டு இருக்கிறது” என்று கூறியுள் ளார். “ஹிஜாப் விவகாரத்தால் கர்நாடகத்திற்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் பாஜக அமைதியை சீர் குலைத்துவிட்டது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.