states

img

பாலியல் வல்லுறவுக்கு பெண்கள்தான் ஆண்களை தூண்டி விடுகின்றனர்!

புதுதில்லி, பிப்.10- “ஜீன்ஸோ, பிகினியோ, ஹிஜாப்போ அது பெண்களின்  உரிமை. ஆண்களே பெண்களே துன்புறுத்தாதீர்கள்” என்று காங் கிரஸ் பொதுச்செயலாளர் பிரி யங்கா காந்தி, டுவிட்டரில் கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந் தார்.  இந்நிலையில், பிரியங்கா காந்திக்கு பதிலளிக்கிறேன் என்ற பெயரில், கர்நாடக பாஜக எம்எல்ஏ ரேணுகாச்சார்யா  தில்லியில் பேட்டி ஒன்றை அளித் துள்ளார். அதில், “பெண்கள் பள்ளி,  கல்லூரிகளில் படிக்கும்போது  தங்களது உடலை முழுமை யாக மூடும்படியான உடையில் வர வேண்டும். இன்றைய காலக் கட்டத்தில், பெண்களின் உடை தான் ஆண்களின் உணர்ச்சியை தூண்டி பாலியல் வன்கொடுமை அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறது. அது நல்லதல்ல!” என்று திமிராகப் பேசியுள்ளார். மேலும், “பிரியங்கா காந்தி யின் தாயார் இத்தாலியைச் சேர்ந்தவர். பிரியங்கா அந்த  கலாச்சாரத்தைப் பின்பற்று பவர்.

அவரது திருமணமும் கூட அப்படித்தான் நடந்தது. அது அவரது தனிப்பட்ட விவகார மாக இருக்கலாம். ஆனால், அதையே பிறருக்கு அவர் அறி வுரையாக கூறக்கூடாது” என்று தனிப்பட்ட தாக்குதலிலும் ஈடு பட்டுள்ளார்.  ரேணுகாச்சார்யாவின் இந்த பேச்சுக்கு சமூகவலைதளங் களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ஊருக்கு உப தேசம் செய்யும் பாஜக எம்எல்ஏ ரேணுகாச்சார்யாவே பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியவர்தான் என்று, அவரின் கடந்தகால அசிங்க வரலாற்றையும் சிலர் அம்பலப்படுத்தியுள்ளனர். ரேணுகாச்சார்யா தன்னுடன் நெருக்கமாக இருந்து ஏமாற்றி விட்டதாக, நர்ஸ் ஜெயலட்சுமி என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட புகைப்படங் களையும் அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள் ளனர்.