அகர்தலா, மார்ச் 1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநில 23-ஆவது மாநாடு அகர்தலா வில் வியாழனன்று பேரணி - பொதுக்கூட்டத்துடன் தொடங்கியது. மாநாட்டுப் பேரணியில் பல்லா யிரக்கணக்கானோர் செங் கொடிகளுடன் அணி வகுத்துச் சென்றனர். தொட ர்ந்து சுவாமி விவேகானந்தர் மைதானத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப் பினர்கள் பிரகாஷ் காரத், மாணிக் சர்க்கார், மாநிலச் செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி, அகோர் தேப் பர்மா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். பேரணியில் சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர். பிரதிநிதிகள் மாநாடு பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 23-ஆவது மாநில மாநா ட்டின் நிறைவில் மாநிலச் செயலாளராக ஜிதேந்திர சவுத்ரி தேர்ந்தெடுக்கப் பட்டார். மாநிலக்குழு உறுப் பினர்களாக 70 பேர், நிரந்தர அழைப்பாளர்களாக 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 16 பேர் கொண்ட மாநிலச் செயற் குழு தேர்வு செய்யப்பட்டது.