உதகை, செப். 9- நீலகிரி படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானியாகி ஜெயஸ்ரீ அனை வரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே நெடுகுளாவை சேர்ந்தவர் மணி. கிராம நிர்வாக அலுவலராக பணி யாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி மீரா. படுகர் சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களுடைய மகள் ஜெயஸ்ரீ, தற்போது நீலகிரி படுக சமுதாயத்தில் முதல் பெண் விமானி யாக தேர்வாகியுள்ளார். ஜெயஸ்ரீ பள்ளி படிப்பை கோத்த கிரியில் உள்ள தனியார் பள்ளியில் முடித்தார். கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் முடித்த இவர் சில காலம் ஐ.டி., துறை யில் வேலை பார்த்தார். பின், விமானி யாக வேண்டும் என்று முடிவு செய்து பைலட் பயிற்சி முடித்து தற்போது விமானியாக சேர்ந்துள்ளார். இதற்காக தென்னாப்பிரிக்காவில் விமான பயிற்சி எடுத்துக்கொண்டார்.
படுகர் சமுதாயத்தில் பெண் ஒருவர் விமானியாகி இருப்பது படுகர் சமுதாயத்தை சேர்ந்த மற்றவர்க ளுக்கு தூண்டுகோலாக உள்ளது. இதுகுறித்து ஜெயஸ்ரீ கூறுகையில், எங்களது சமுதாயத்தில் அண்டை மாவட்டம், மாநிலங்களுக்கு படிக்க அனுப்ப தயங்குகிறார்கள். அப்ப டிப்பட்ட சூழ்நிலையில் மற்றொரு நாட்டுக்கு விமான பயிற்சி பெற தைரியமாக எனது பெற்றோர் அனுப்பி வைத்தனர். பொதுவாக விமானி என்றால் ஊர் சுற்றும் வேலை என்று அனை வரும் நினைப்பார்கள். ஆனால் வழக்கமான வேலைகளை விட சவால் கள் அதிகம் உள்ள வேலை விமானி யாக இருப்பது. உடல் பரிசோதனை, மனநிலை பரிசோதனைகளில் தேர்வு பெறவில்லை என்றால் பணி இழக்க நேரிடும். எனவே, உடல் நிலை, மனநிலையை மிகவும் நன் றாக பார்த்துக் கொள்ள வேண்டும். மனம் தைரியம் அதிகளவில் இருக்க வேண்டும். இப்படி ஒரு வேலைக்கு நான் வர காரணம் எனது ஆரம்ப கால பள்ளிப் படிப்பும் அங்கிருந்த ஆசிரியர்களும் முக்கிய காரணமா கும். எங்கள் படுகர் சமுதாயம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் முதல் பெண் விமானியானது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.