இம்பால், ஜூலை 25- நாட்டின் பொறுப்பான பதவி யில் இருப்பதால், மணிப்பூர் விவகா ரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சரி யான அணுகுமுறையுடன் தலையிட வேண்டும் என்று, மனித உரிமைச் செயற்பாட்டாளரான ஐரோம் ஷர் மிளா வேண்டுகோள்விடுத்துள்ளார். ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்திற்கு எதிராக 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி யவர், மணிப்பூரை சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஐரோம் ஷர்மிளா சானு. இனக்கலவரத்தால் மணிப்பூர் பற்றியெரியும் நிலையில், சரியான அணுகுமுறையுடன் தலை யிடுமாறு ஒன்றிய அரசுக்கும் பிரத மர் மோடிக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். “நாம் அனைவரும் மனிதர்கள் என்று நான் கூற விரும்புகிறேன். இப்படியெல்லாம் வெறுக்க வேண் டிய அவசியம் என்ன?. மனிதர் களாக வாழும் போது நமக்கு எதுவும் சொந்தமில்லை, நாம் இறக்கும் போது இந்த உலகத்திலிருந்து எதை யும் எடுத்து செல்ல முடியாது. நாம் சமூக விலங்குகள் என்பதால் ஒரு வரையொருவர் சார்ந்து இருக் கிறோம். எனவே முதலில் மனிதர் களாக இருப்போம். மணிப்பூரில் ஆண்கள் கும்பல் ஒன்று பெண்களை நிர்வாணமாக இழுத்து செல்லும் வீடியோவை பார்த்ததும் கலக்கம் அடைந்தேன். அந்த கொடூரமான வைரல் வீடியோ வில் இடம் பெற்றுள்ள சம்பவம் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். அனைத்துத் துறை களிலும் பல தரப்பட்ட இன அடை யாளங்களை கொண்ட நாட்டின் பொறுப்பான பதவியில் இருப்பதால், இந்த விவகாரத்தில் சரியான அணு குமுறையுடன் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நாம் அனைவரும் மனிதர்கள். இப்படிப்பட்ட வெறுப்பு, காட்டு மிராண்டித்தனத்திற்கு என்ன தேவை? வெறுப்பு மற்றும் காட்டு மிராண்டித்தனத்தை மக்கள் கைவிட வேண்டும்” என்று அவர்கூறியுள்ளார்.