states

img

ராகுல் காந்தியை மாயாவதி குற்றம் சாட்டுவது சரியல்ல!

புதுதில்லி, ஏப்.11- ஐஏஎஸ் அலுவலர் ஏகே ராஜு தொகுத்த ‘தி தலித் ட்ரூத்’ (The Dalit Truth) என்ற புத்த கத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தில்லியில் உள்ள ஜவ ஹர் பவனில் வெளியிட்டார்.  அப்போது, “நடந்து முடிந்த உ.பி. தேர்தலின் போது, மாயா வதியின் பகுஜன் சமாஜ் கட்சி யுடன் கூட்டணி சேர காங்கிரஸ் விரும்பியதாகவும், அதற்காக  மாயாவதியை முதல்வர் வேட் பாளராக முன்னிறுத்தவும் தயார் என்று கூறியதாகவும், ஆனால், தங்களிடம் பேசுவதற்குக் கூட மாயாவதி தயாராக இல்லை;  சிபிஐ, அமலாக்கத்துறை, பெகா சஸ் போன்றவற்றுக்கு பயந்து  பாஜக எளிதில் வெற்றிபெற மாயாவதி வழிவகுத்துவிட்டார்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மாயா வதி, “தனது சொந்த கட்சியை ஒழுங்காக நடத்த முடியாத ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ் கட்சியை விமர்சனம் செய்கி றார்.

அவர் கூறியது முற்றிலும் தவறானது. இந்த அற்ப விஷ யங்களை காட்டிலும் உத்தரப் பிரதேச தேர்தல் தோல்விக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்க  வேண்டும். இது போன்ற கருத் துக்களை வெளியிடுவதற்கு முன் காங்கிரஸ் 100 முறை யோசிக்க வேண்டும். அவர்களால் பாஜகவை வெற்றிபெற முடிய வில்லை. ஆனால் இந்த விமர்ச னங்களை செய்து கொண்டே இருக்கிறார்கள்” என்று குறிப் பிட்டார். இந்நிலையில், “தலித்துக் கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியை ராகுல் காந்தி அவ தூறு செய்வதாக மாயாவதி குற்றம் சாட்டியிருப்பது சரி யல்ல. காங்கிரஸ் கட்சி எப்போ தும் மக்களுடன் உள்ளது. காங் கிரஸ் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும்  அனைத்து பிரச்சனைகளுக் கும் தீர்வு காண போராடுகிறது” என்று காங்கிரஸ் மூத்த தலை வரான மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.