மும்பை, ஏப். 4 - 2002-ஆம் ஆண்டு மத வன் முறையின்போது குஜராத்தின் நிலைமை, காஷ்மீரைவிட மோச மாக இருந்தது என்று தேசிய வாத காங்கிரஸ் கட்சித் தலை வர் சரத் பவார் குற்றம்சாட்டி யுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் சுற்றுப் பயணத்தின்போது அளித்த பேட்டியில், சரத் பவார் மேலும் கூறியிருப்பதாவது: ‘தி காஷ்மீா் பைல்ஸ்’ போன்று எடுக்கப்படும் திரைப் படங்கள் பிற மதத்தினரைக் கோபப்படுத்தும். அந்தத் திரைப் படம் கூறும் சில சம்பவங்களின் போது காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. வி.பி. சிங் பிரதம ராக இருந்தார். அவரது தலைமை யிலான கூட்டணி அரசுக்கு பாஜக அப்போது ஆதரவளித்து வந்தது. மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவா் முப்தி முகமது சயீத் உள்துறை அமைச்ச ராக இருந்தார். அப்போது பாகிஸ்தானால் தூண்டிவிடப் பட்ட ஒரு தரப்பினா், இந்தியா வில் இருக்க விரும்பிய முஸ்லிம்கள் மீதும், இந்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தினா். அப்போதைய அரசு மக்களைப் பாதுகாக்காமல், காஷ்மீரில் இருந்து இந்துக்களை வெளியேறுமாறு கூறியது. எனவே, ‘தி காஷ்மீா் பைல்ஸ்’ திரைப்படம் உண்மைகளின் அடிப்படையில் இல்லை. இனவாதம், வெறுப்புணா்வை தூண்டும் வகையில் உள்ளது. இதுபோன்ற திரைப்படத்தை ஆட்சியில் இருப்பவா்கள் ஊக்கு விப்பதும், இலவசமாகப் பார்க்க வைப்பதும் அரசியல் ஆதாயத்துக் காக அவர்கள் மக்களிடம் பிரி வினையைத் தூண்ட விரும்பு கிறார்கள் என்பதையே காட்டு கிறது. 2002 மத வன்முறை யின்போது குஜராத்தின் நிலைமை, காஷ்மீரைவிட மோச மாகவே இருந்தது. இவ்வாறு சரத் பவார் கூறியுள்ளார். மேலும், “2024-இல் தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான கூட்டணிக்குத் தலைமை வகிக்க தனக்கு ஆா்வமில்லை” என்று தெரிவித்துள்ள சரத் பவார், “அதேநேரம் பாஜக- வுக்கு எதிராக அனைத்துக் கட்சி களையும் ஒருங்கிணைக்கும் முயற்சிக்கு ஆதரவாக இருப் பேன். அதனை வலுப்படுத்து வேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.