புதுதில்லி, மார்ச் 8- இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை அடுத்து சர்வதேச விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் இணைந்து பரவியதால் இந்தியாவில் சர்வதேச விமான சேவை தொடங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் விமான சேவையை ஒன்றிய அரசு மீண்டும் தொடங்கியுள்ளது. மார்ச் 27ம் தேதி முதல் சர்வதேச விமான சேவை தொடங்கப் படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது