states

நாடு முழுவதும் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்

புதுதில்லி,ஜன.3- நாடு முழுவதும் சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3 அன்று தொடங்கியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் உலகமெங்கும் பரவத்தொடங்கியுள்ளது.இதனால் பல்வேறு மாநிலங்களில் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  இந்நிலை யில் ஜனவரி 3 திங்களன்று நாடு முழுவதும் 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர், சிறு மியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி  தொடங்கியது. பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சிறுவர், சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சிறுவர், சிறுமிகள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். தடுப்பூசி செலுத்தி 30 நிமிடம் கண்கா ணிப்பில் வைத்த பின்னரே மாணவ, மாணவி கள் வகுப்புகளுக்கு அனுப்பி வைக்கப்படு கின்றனர். அதன் பின் 28 நாட்களுக்கு பிறகு  2-வது டோஸ் செலுத்தப்படும் என்று தெரி விக்கப்பட்டது. தடுப்பூசி போடுவதற்காக பள்ளிகளில் தனியாக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.