புதுதில்லி, அக். 25 - திட்டங்களை நிறைவேற்றுவதில் மோடி அரசு காட்டிய அலட்சியத்தால், 384 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கூடுதலாக ரூ. 4 லட்சத்து 52 ஆயிரம் கோடி செலவிடும் நிலை உருவாகி இருப்பதாக, ஒன்றிய அரசின் புள்ளி யியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அண்மையில் அறிக்கை வெளியிட்டுள்ளது. ரூ. 150 கோடி மற்றும் அதற்கும் அதிகமான செலவில் மேற்கொள்ளப் படும் உள்கட்டமைப்புத் திட்டங்களை அமைச்சகம் நேரடியாக கண்காணித்து வருகிறது. அந்த வகையில், வளர்ச்சி க்கு தீட்டப்பட்ட 1,529 உள்கட்டமைப்பு திட்டங்களில் 662 திட்டங்களின் பணிகளை முழுமையாக நிறைவேற்று வதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, 1,529 திட்டங்களை அமல்படுத்துவதற்காக ரூ. 21 லட்சத்து 25 ஆயிரத்து 851 கோடியே 67 லட்சம் ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆனால், திட்டங்களை முடிக்கும் தருவாயில் இதற்கான செலவினம் ரூ. 25 லட்சத்து 78 ஆயிரத்து 197 கோடியே 18 லட்சமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, 384 உள்கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்ற கூடுதலாக ரூ. 4 லட்சத்து 52 ஆயிரத்து 345 கோடியே 51 லட்சம் செலவாகும். முன்பு ஒதுக்கப்பட்ட ரூ. 21 லட்சத்து 25 ஆயி ரத்து 851 கோடியே 67 லட்சம் நிதியில், இந்த கூடுதல் செலவினம், 21.28 சத விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது. 1529 உள்கட்டமைப்புத் திட்டங் களை நிறைவேற்றுவதற்காக 2022 செப்டம்பர் இறுதி நிலவரப்படி ரூ. 13 லட்சத்து 78 ஆயிரத்து 142 கோடியே 29 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இது, மொத்த திட்ட செலவினத்தில் 53.45 சதவிகிதம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மொத்தமுள்ள 662 திட்டங்களில், 133 திட்டங்கள் 1 முதல் 12 மாதங்கள் வரையிலும், 124 திட்டங்கள் 13 முதல் 24 மாதங்கள் வரையிலும், 276 திட்டங்கள் 25 முதல் 60 மாதங்கள் வரை யிலும், 129 திட்டங்கள் 61 மாதங் களுக்கு மேலாகவும் காலதாமதத்தில் இருப்பவை என்றும் ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.