states

img

பிபின் ராவத் மரணத்திற்கு மனிதத் தவறே காரணம் நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் தகவல்

முன்னாள் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 8-ஆம் தேதி தமிழ்நாட்டின் கோயமுத்தூரில் இருந்து ஊட்டிக்கு ஹெலிகாப்டரில் சென்றபோது மனைவி மதுலிகா உள்ளிட்ட 11  பேருடன் சென் றார். குன்னூர் அருகே ஹெலி காப்டர் மலை மீது மோதி விபத்தில் சிக்கியதில் அனை வரும் உயிரிழந்தனர். நாட்டின் முப்படை தலைமைத் தளபதி விபத்தில் இறந்தது சர்ச்சையானது.  இந்நிலையில், பிபின் ராவத் உள்ளிட்ட 11 பேரின் மரணத்திற்கு மனிதத் தவறே காரணம் என நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறை நிலைக்குழு கடந்த 5 ஆண்டுகளுக்கான (2017 முதல்  2022 வரை) விமானப்படை விபத்துகள் தொடர்பான அறிக்கையை நாடாளு மன்றத்தில்  தாக்கல் செய்தது. அதில், “5 ஆண்டுகளில் விமானப்படை தொ டர்புடைய 34 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. முன்னாள் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததற்கு, ஹெலிகாப்டரை இயக்கிய குழுவின் தவறே காரணம் ஆகும். விமானியின் பிழையால் விபத்து நடந்துள்ளது” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.