states

img

‘சிறுபான்மையினர் எதிர்ப்பு’ நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல!

ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர்  ரகுராம் ராஜன் எச்சரிக்கை

புதுதில்லி, ஏப். 22 - “இந்தியாவில் சிறுபான்மை மக்களைக் குறிவைத்து அரசும், அரசு அமைப்புகளும் எடுக்கும் நடவடி க்கைகளால் இந்திய பொருட்களுக்கு வர்த்தக இழப்பு ஏற்படுவது மட்டும் அல்லாமல் இந்தியாவின் இந்த, ‘சிறு பான்மையினர் எதிர்ப்பு’ (Anti-Minority) முகம் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதிலும் பெரும் பிரச்ச னையாக இருக்கும். இந்தியாவை உலகளவில் நம்பகத்தன்மையற்ற நாடாக்கி விடும்” என்று உலகின் முன் னணி பொருளாதார வல்லுநர்களில் ஒருவரான ரகுராம் ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுந ராக இருந்த ரகுராம்ராஜன், பிரதமர் மோடியின் பொருளாதார நட வடிக்கைகளால் அதிருப்தியடைந்தார். ரிசர்வ் வங்கியின் ஆளுநராக தொடர விரும்பாத அவர், ‘சிகாகோவின் பூத் ஸ்கூல் ஆப் பிசினஸ்’ (Chicago’s Booth School of Business)-இல், பேராசிரியர் பணிக்குச் சென்றார். எனினும் இந்தியப் பொருளாதார நிலைமைகள் பற்றி அவ்வப்போது மதிப்பீடுகள் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், ‘டைம்ஸ் நெட்வொர்க்’ தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சி நடத்திய பொருளா தார மாநாட்டில் (Economic Con clave) ‘இந்தியாவின் பொருளாதார மும், அது எதிர்நோக்கி இருக்கும் சவால்களும்’ என்ற தலைப்பில் விரி வான உரையை ரகுராம் ராஜன் நிகழ்த்தி யுள்ளார். அதில், அவர் பேசியிருப்ப தாவது:

ஒரு ஜனநாயக நாடு அனைத்து தரப்பு குடிமக்களையும் சமமாக, மரி யாதையாக நடத்தினால், அது ஏழை நாடாக இருந்தாலும் வெளிநாட்டு மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெறும். அதன் காரணமாக அந்த நாட்டின் பொருட்களை வாங்க வாடிக்கை யாளர்கள் ஆர்வம் காட்டுவார்கள். ‘நல்லது செய்யும் இந்த நாட்டின் பொருட் களை வாங்குகிறேன்’ என்று கூறு வார்கள். அதன் மூலமாக நமது நாட்டின் சர்வதேச சந்தை விரிவடையும். பொரு ளாதார சந்தைகளில் மட்டுமல்ல, சர்வ தேச உறவுகளும் இதை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றன.  நம்பிக்கைக்குரிய நட்பு நாடாக ஒரு நாட்டை மற்ற நாடுகள் தேர்வு  செய்வது அந்நாட்டில் சிறுபான்மை சமு தாய மக்கள் எப்படி நடத்தப்படு கின்றனர் என்பதைப் பொறுத்துதான். ஆனால், சிறுபான்மையினருக்கு எதிரான தற்போதைய முகம், இந்திய பொருட்களின் சந்தையை சுருக்கி விடும். சர்வதேச நாடுகளும் நம்மை நம்பிக்கைக்குரிய நாடாக கருத மாட்டார்கள். இந்தியா சிறுபான்மை மக்களுக்கு எதிரானது எனும் பிம்பம் கட்டமைக்கப்பட்டால் அது இந்திய நிறுவனங்களையும், இந்தியப் பொருட்களுக்கான வெளிநாட்டு சந்தைகளையும் பாதிக்கும். இந்தியா வலிமையான வளர்ச்சிப் பாதையில் பய ணிக்க வேண்டிய நிலையில், நாட்டின் அடிப்படையான ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை போன்றவற்றில் பாதிப்பு ஏற்படுவது இந்தியாவுக்குத் தான் பெரிய இழப்பு.

சேவைத் துறை ஏற்றுமதியில் இந்தியர்களுக்கும் இந்தியாவுக்கும் மிகப்பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது. நாம் அதைக் கைப்பற்ற வேண்டும். அதே நேரம் தனியுரிமைக் கொள்கை க்கு மேற்குலக நாடுகள் எவ்வளவு முக் கியத்துவம் தருகின்றன என்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.  மருத்துவத்துறையில் நமக்கான வாய்ப்புகள் குறைந்ததற்கு காரணம், தனியுரிமை மற்றும் பாதுகாப்பு கொள்கைகளில் இந்தியா மீது திருப்தி ஏற்படாததுதான். பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தொடர்பான அச்சங்கள் வெற்றிக்கு பெரும் தடையாக இருக்கும். நாட்டின் மாண்பைச் சிதைத்துவிடும். இந்தியாவின் அரசியலமைப்பு நிறுவனங்களான தேர்தல் ஆணை யம், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ போன்றவற்றை குறைத்து மதிப்பிடுவது, நம் நாட்டின் ஜனநாயக மாண்புகளை சிதைத்துவிடும். 3  வேளாண் சட்டங்களுக்கு எதிராக  எழுந்த எதிர்ப்பு போன்ற உள்நாட்டு  விவகாரங்களில் ஒன்றிய அரசானது,  சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்தி, அதன்படி தேவையான சட்டத் திருத்தங்கள் கொண்டு வரலாம். இப்படித்தான் சவால்களை சமாளிக்க வேண்டும். இவ்வாறு ரகுராம் ராஜன் பேசியுள்ளார்.

கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்குத் தடை, முஸ்லிம்களின் வாகனங்களில் பயணிக்கத் தடை, முஸ்லிம்களின் கடைகளில் பொருட்கள் வாங்கத் தடை என்று துவங்கி, ஒவ்வொரு நாளும் இஸ்லாமியர்க்கு எதிரான வன்முறை நாட்டில் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. ராம நவமி, அனுமன் ஜெயந்தி பெயரில் ம.பி., குஜராத், தில்லி ஜஹாங்கீர் புரி பகுதி களில் இஸ்லாமியர்களின் கடைகள், வீடுகள் புல்டோசர் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்து வருகின்றன. இந்தப் பின்னணியிலேயே, சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறைகளால் இந்தியப் பொருளாதாரத்திற்கே பாதிப்பு என்பதை ரகுராம் ராஜன் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில், ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும் கலந்து கொண்டார்.