states

img

ஐஎம்எப் அதிகாரி தகவல் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறையும்!

புதுதில்லி, மார்ச் 19- ரஷ்யா - உக்ரைன் இடை யிலான மோதலால், உல கம் முழுவதுமே பொருளாதார நடவடிக்கைகள் பாதிப் பைச் சந்தித்து வருகின்றன. இந்தியாவிலும் கடுமையா கவே எதிரொலித்து வருகிறது. சா்வதேசச் சந்தையில் எரி பொருள் மற்றும் உரங்களின் விலை அதிகரிப்பால் இறக்கு மதி செலவினம் கணிசமாக உயரும் சூழல் ஏற்பட்டுள் ளது. இது, இந்திய அரசின் மூலதனச் செலவின திட்டங்க ளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு நடப்பாண்டில் இந்தி யாவின் பொருளாதார வளா்ச்சியை, தரமதிப்பீட்டு நிறு வனங்கள் குறைத்து வருகின்றன.  2021-22 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 9.5 சதவிகி தம் என்று முன்பு கணித்திருந்த மூடிஸ் நிறுவனம், தற் போது அதனை 9.1 சதவிகிதமாக குறைத்துக் கொண்டுள்ளது. அதேபோல ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ முன்பு, 8 சதவிகிதம் என்று கணித்திருந்த ஜிடிபி மதிப்பீட்டை, தற்போது 7.6 சதவிகிதமாக மாற்றியுள்ளது.  உக்ரைன் - ரஷ்யா போரால், அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளான இந்தியா மற்றும் தாய்லாந்து அதிக பாதிப்புக்குள்ளாகும் என ‘எஸ்&பி’ நிறுவனம் எச்சரித்துள்ளது. “போர் காரணமாக ஏற்பட்டிருக்கும் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியானது, இந்தியாவின் பொரு ளாதாரத்தை எதிர்மறையாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டிருக்கும் திடீர் உயர்வானது, வர்த்தக அதிர்ச்சி களை ஏற்படுத்தி உள்ளது. இது பணவீக்கம் உயரவும், நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கவும் காரண மாக அமையும். விநியோக தடைகள் இந்தியாவின் இறக்குமதியை பாதிக்கலாம். இந்திய பொருளாதா ரத்தை பொறுத்தவரை, நிச்சயமற்ற நிலை இருப்பதாக கருதுகிறேன்” என்று ஐஎம்எப் தகவல் தொடர்புத் துறை இயக்குநர் ஜெர்ரி ரைஸ் கூறியுள்ளார்.