states

ஆப்கனுக்கு 2 டன் மருந்துகள் வழங்கிய இந்தியா

புதுதில்லி,ஜன.9- ஆப்கானிஸ்தானுக்கு 2 டன் அளவிலான உயிர்காக்கும் மருந்துகளை இந்தியா வழங்கி யுள்ளது.  ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத் தை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.  இந் நிலையில் இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம்  1.6 டன் அளவிலான உயிர்காக்கும் மருந்துகளை விமானம் மூலம் ஆப்கானிஸ்தா னுக்கு அனுப்பி வைத்தது. இதன் தொடர்ச்சி யாக 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளும் வழங்கப்பட்டன. இந்த நிலையில் வெள்ளியன்று 2 டன் அளவிலான உயிர்காக்கும் மருந்துகளை இந்தியா, ஆப்கானிஸ்தானிடம் வழங்கியது. இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்ச கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆப்கா னிஸ்தான் மக்களுக்கான நமது மனிதாபிமான உதவியின் ஒரு பகுதியாக, ஆப்கானிஸ்தானு க்கு 2 டன் அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகளை கொண்ட 3-வது தொகுதி மருத்துவ உதவியை இந்தியா இன்று வழங்கி யது. அவை காபூலில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில்  ஒப்படைக்கப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.