புதுதில்லி, ஜூலை 14 - பாலின சமத்துவத்தில் இந்தியா 135-ஆவது இடத்தில் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக பொருளாதார மன்றமானது 2022-ஆம்ஆண்டு பாலின சமத்துவ இடை வெளி குறித்த அறிக்கையை ஜெனீவாவில் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, உலகிலேயே ஆண், பெண் சமத்துவம் வழங்குவதில் ஐஸ்லாந்து தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. பின்லாந்து, நார்வே, நியூசிலாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதில் இந்தியாவிற்கு 135-ஆவது இடமே கிடைத்துள்ளது. இந்தியாவிற்கு கீழே சுமார் 11 நாடுகள் மட்டுமே பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்தியாவிற்கும் கீழான தரவரிசையில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், காங்கோ, ஈரான் மற்றும் சாத் ஆகிய நாடுகளே உள்ளன. இந்தியாவில் பாலின சமத்துவத்தை கொரோனா தொற்று பாதிப்பானது, ஒரு தலைமுறைக்கு பின்னுக்கு தள்ளி விட்டதாகவும், பலவீனமான பொருளாதார மீட்சி, உலகளவில் இந்தியாவை மோச மாக்குவதாகவும் உலக பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக மாநில தலை வர்களாக பெண்கள் பணியாற்றிய ஆண்டு களின் பங்கு குறைந்து வருவதும் பாலின சமத்துவத்தில் இந்தியா பின்தங்கியதற்கு முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு அரசியல் அதிகார மளித்தலில் இந்தியா 48-ஆவது இடத்தில் உள்ளது. சுகாதாரம் மற்றும் வாழ்வியல் பிரிவில் இந்தியா 146-ஆவது இடத்தில் உள்ளது. பாலின சமத்துவமின்மை தெற்கு ஆசியா வில் அதிகப்படியாக 62.3 சதவிகிதமாக உள்ளது. இந்த சமத்துவமின்மை இடை வெளியை பூா்த்தி செய்ய 197 ஆண்டுகள் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.