பெங்களூரு,மார்ச் 9- கர்நாடக மாநிலம் பெல்காமில் நடை பெற்ற இந்தியா- ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி வியாழனுடன் நிறைவடைகிறது. இந்தியா மற்றும் ஜப்பான் ராணுவங்களுக்கு இடையில் ‘தர்மா கார்டியன் 2022’ என்ற பெயரில் கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநிலம் பெல்காமில் உள்ள ‘மராத்தா லைட் இன்ஃபாண்டரி ரெஜிமெண்ட்’ செண்டரில் இந்த பயிற்சி நடைபெறுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி தொடங்கிய கூட்டு ராணுவ பயிற்சி யானது, மார்ச் 10 ஆம் தேதி நிறைவடை கிறது. பரஸ்பர ஒத்துழைப்பு, போர்க்கால நட வடிக்கைகள் மற்றும் துரித செயல்பாடுகளை மேம்படுத்துவது குறித்து வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். பயிற்சியின் போது இருநாட்டு ராணுவ வீரர்களும் ஆயுதங் களுடன் ஹெலிகாப்டரில் இருந்து கயிறுகள் மூலம் குதித்த காட்சிகள் சமூக வலைதளங் களில் பரவி வருகின்றன.