states

‘அடுத்த ஆண்டிலாவது பாலியல் துன்புறுத்தல் இல்லாத ஹோலி கொண்டாடுங்கள்!’

தில்லி இளைஞர்களால் பாதிக்கப்பட்ட ஜப்பான் இளம்பெண் கண்ணீர்

புதுதில்லி, மார்ச் 13- அடுத்த ஆண்டாவது, பெண்களுக்கு பாலி யல் துன்புறுத்தல்கள் இல்லாத ஹோலி பண்  டிகை கொண்டாடப்படும் என நம்புவோம் என்று  பாதிக்கப்பட்ட ஜப்பான் இளம்பெண் கண்ணீர்  விட்டுள்ளார். கடந்த மார்ச் 8 அன்று நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்  டாடப்பட்டது. ஹோலி பண்டிகைக்காக ஜப்  பானில் இருந்து 24 வயதுடைய இளம்பெண் ஒருவர் இந்தியா வந்திருந்தார். அவர் தில்லி யில் நடைபெற்ற ஹோலி பண்டிகை கொண் டாட்டத்தில் கலந்துகொண்டபோது, அந்த ஜப்  பானிய இளம்பெண்ணை, இளைஞர்கள் 4,5 பேர் சேர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி னர்.  சாலையில் சென்று கொண்டிருந்த ஜப்பா னிய இளம்பெண் மீது முட்டையை உடைப்பது போன்றும், தண்ணீரை பீய்ச்சி அடிப்பது போன்  றும் காட்சிகள் வெளியாகின. மேலும், இளை ஞர் ஒருவர், அந்தப் பெண்ணைப் பிடித்து அவர் மீது வண்ணப்பொடிகளை தூவுகிறேன் என்ற  பெயரில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இவர்களிடமிருந்து தப்பமுயன்றபோதும் அந்த இளம்பெண்ணை விடாமல், ஒரு நபர் தகாத முறையில் நடந்துகொண்ட போது,  அந்த ஜப்பானியப் பெண், ஒரு இளைஞனை  கன்னத்தில் அறைந்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.  இந்த வீடியோ, இணையத்தில் வெளியான  நிலையில், அது கடும் கண்டனங்களுக்கு உள்ளானது. இந்த சம்பவம் தொடர்பாக விரி வான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று  தேசிய மகளிர் ஆணையம் தில்லி காவல் துறைக்கு உத்தரவிட்டது.  

பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட ஜப்பா னிய பெண்ணை அடையாளம் காண உதவி  செய்யுமாறு ஜப்பான் தூதரகத்திற்கு மின்னஞ்  சல் அனுப்பிய தில்லி போலீசார், அதன டிப்படையில் விசாரணை மேற்கொண்டு, ஒரு  சிறுவன் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவுசெய்து கைது செய்தனர். இதனிடையே, பாதிக்கப்பட்ட ஜப்பானிய இளம்பெண், இந்தியாவை விட்டு வெளியேறி,  வங்கதேசம் சென்றுவிட்டார். எனினும், ஹோலி பண்டிகையின்போது, தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்ப வம் குறித்து, அந்த ஜப்பானிய இளம்பெண் டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களைப் பதி விட்டுள்ளார். அதில், “ஹோலி பண்டிகையில் பகலில் ஒரு பெண் தனியாக வெளியே செல்வது ஆபத்  தானது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அத னால்தான் எனது நண்பர்கள் 35 பேருடன் ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்றேன். ஆனால் எனக்கு துரதிர்ஷ்டவசமாக இந்த சம்ப வம் நடத்து விட்டது. சம்பவத்தன்றே நான்  இந்தியாவை விட்டு  வெளியேறி வங்கதேசம் சென்றுவிட்டேன். இப்போதும் நான் இந்தியாவை நேசிக்கி றேன். பல முறை இந்தியாவிற்கு வந்திருக்கி றேன். இது கண்கவர் நாடு. இதுபோன்ற ஒரு சம்பவம் நடத்திருப்பதால் நான் இந்தியாவை வெறுக்க மாட்டேன்; எப்போதும் நேசிப்பேன். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர  நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதனால்  அடுத்த ஆண்டு முதல் ஹோலி பண்டிகை யில் பெண்களுக்கு எதிராக பாலியல் துன் புறுத்தல்கள் குறையும் என நம்புவோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.