புதுதில்லி, ஜூன் 1 - இந்தியர்களின் இனத் தூய்மை குறித்து ஆய்வு செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ள தாகவும், ஒன்றிய கலாச்சார அமைச்சகம் மரபணு வரலாற்றை நிறுவவும், இந்தியாவில் உள்ள இனங்களின் தூய்மையை கண்டறியவும் டி.என்.ஏ. விவரக்குறிப்பு கருவிகளை பெறு வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் செய்தி வெளியாகி இருந்தது. இந்த செய்தியை குறிப்பிட்டு டுவிட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டிருக்கும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, “கடந்த முறை ஒரு நாட்டில் கலாச்சார அமைச்சகம் இன தூய்மை பற்றி ஆய்வு செய்த போது, அது நன்றாக முடிவடையவில்லை. இந்தியாவுக்கு தேவை, வேலைப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார செழிப்புதான், இனத் தூய்மை அல்ல, பிரதமரே! என்று குறிப்பிட்டுள்ளார்.