புதுதில்லி, ஜூலை 27- நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர், ஜூலை 20-இல் தொடங்கி நடை பெற்று வரும் நிலையில், இந்தியாவின் வெளி நாட்டுக் கடன் தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஒன்றிய நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள் ளார். அதில், “ரிசர்வ் வங்கியின் தரவுகள்படி, நாட்டின் வெளிநாட்டுக் கடன் 624.65 பில்லி யன் அமெரிக்க டாலராக (சுமார் ரூ. 46 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. அதாவது, உலக வங்கி உள்ளிட்ட வெளி நாட்டு அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட கடன் 74.84 பில்லியன் டாலர். இதில், அர சாங்கம் மட்டும் வாங்கிய கடன் 63.45 பில்லி யன் டாலர். 11.39 பில்லியன் டாலர் அரசு அல்லாத நிறுவனங்கள் வாங்கியுள்ளன. இதில், சர்வதேச நாணய நிதியத்திடம் வாங்கப்பட்டுள்ள கடன் 22.26 பில்லியன் டாலர்” என தெரிவித்துள்ளார். இந்தியாவின் வெளிநாட்டுக் கடன், கடந்த 4 ஆண்டுகளில் 12 சதவிகிதம் அதிக ரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, இந்தியாவின் வெளிநாட்டுக்கடன் கடந்த 2021 மார்ச் இறுதி வரையில், 573.4 பில்லியன் டாலராக இருந்தது. இது, 2022 மார்ச் மாத இறுதி யில் 619.1 டாலராக அதிகரித்தது. இதுவும், இந்தியாவின் ஒட்டுமொத்தக் கடனில் மூன்றில் ஒருபகுதி மட்டுமே ஆகும். ஏற்றுமதி கடன்கள், வணிகக் கடன்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களின் வைப்புத் தொகைகள், குறுகிய காலக் கடன்கள், நாணயம் மற்றும் வைப்புத்தொகைகள், கடன் பத்திரங்கள், முன்பணங்கள், நேரடி முதலீடு உள்ளிட்டவை தனியாகும். அவை நேரடி வெளிநாட்டுக் கடனை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, கடந்த 2023 மார்ச் வரையி லான கணக்குப்படி, ஒன்றிய அரசின் மொத்தக் கடன் தொகை சுமார் ரூ. 155.8 லட்சம் கோடி. இது மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் 57.3 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.