states

img

கரூர் - கோவை நெடுஞ்சாலை அகலப்படுத்தப்பட வேண்டும் கிரீன் ஃபீல்டு சீரமைப்பு அகற்றப்பட வேண்டும்

புதுதில்லி, மார்ச் 25- கரூர் - கோயம்புத்தூர் நெடுஞ்சாலை அகலப்படுத்தப்பட வேண்டும் என்றும், கிரீன் ஃபீல்டு சீரமைப்பு அகற்றப்பட வேண்டும் என்றும் மக்களவையில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக்  குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன் வலி யுறுத்தினார். நாடாளுமன்ற பட்ஜெட்கூட்டத்தொட ரின் இரண்டாவது அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திங்கள் கிழமை அன்று தரைவழி மற்றும் போக்குவரத்து அமைச்சகத்தின் 2022-23ஆம் ஆண்டுக் கான கோரிக்கை மானிய பொது விவா தத்தின் கீழ் பங்கேற்று பி.ஆர். நடராஜன் பேசியதாவது: கரூரிலிருந்து கோயம்புத்தூர் வரை யிலான க்ரீன் ஃபீல்டு நெடுஞ்சாலை மற்றும் அரிசிபாளையம், கலங்கல், குன்னத்தூர் ஏனைய ஊர்கள் வழியாக எட்டிமடையிலிருந்து நரசிம்மநாயக்கன் பாளையத்தை இணைக்கும் ரிங் ரோடு, ஆகியவை கோரிய முன்மொழிவுகள் கைவிடப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தற்போது இருக்கும் நெடுஞ்சாலை (முந்தைய NH 67) இந்த இரு நகரங் களையும் இணைக்கிறது. இந்த முன் மொழிவானது இந்த நெடுஞ்சாலையை அகலப்படுத்துவதற்காக முன்மொழி யப்பட்டு பின்னர் திடீரென்று ஒத்தி வைக்கப்பட்டு இந்த இரு நகரங்களுக்கு இடையில் கிரீன் ஃபீல்டு சீரமைப்பு உரு வாக்கப்பட்டது. இத்திட்டத்துடன் கூடுதலாக ஒரு ரிங் ரோடும் இணைக்கப்பட்டது.

6 கி.மீ. தூரம் குறைக்க சீரமைப்பு தேவையற்றது

தற்போது இருக்கும் நெடுஞ்சாலை யை ஆறு வழி நெடுஞ்சாலையாக விரி வாக்கம் செய்ய முடியும். இரு நகரங்  களுக்கு இடையே முன்மொழியப் பட்டுள்ள கிரீன் ஃபீல்டு சீரமைப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணை யத்தின் கூற்றுப்படி தற்போது இருக்கும் நெடுஞ்சாலையை விட 6 கி.மீ தூரமே  குறைவாகும். இந்த 6 கி.மீ தூரக்குறை விற்காக ஒரு கிரீன் ஃபீல்டு சீரமைப்பு ஏற்படுத்துவது தேவையற்றது. இந்த கிரீன் ஃபீல்டு சீரமைப்பு, தற்போ தைய நெடுஞ்சாலையின் ஓரமாகவும்  அதற்கு இணையாகவும் செல்கிறது. மூன்று கி.மீ.க்குள்ளாக தற்போதைய நெடுஞ்சாலைக்கு இணையாக செல்லும் கிரீன் ஃபீல்டு சீரமைப்பு என்பது முழுவதுமாக வளங்களை உபயோகமற்ற தாக ஆக்குவதாகும். மேலும் தற்போதைய நெடுஞ்சாலையின் வழியில் உள்ள கேஎஸ்என் புரம், பல்லடம், பொங்கலூர், அவினாசிபாளையம், காங்கயம், வெள்ள கோயில், தென்னிலை மற்றும் பரமத்தி  ஆகிய  ஊர்கள் ஒன்றுகூட முன்மொழி யப்பட்டுள்ள கிரீன் ஃபீல்டு சீரமைப்பினால் இணைக்கப்படவில்லை. கோயம்புத்தூர் - கரூர்க்கு இடையேயான, மேற்சொன்ன ஊர்களை இணைக்கும் தற்போதைய நெடுஞ்சாலையில் 500க்கும் அதிகமான தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான பேருந்துகள் ஏறக்குறைய ஆண்டுக்கு ஒரு கோடி பயணி களோடு  இயங்கிக் கொண்டிருக்கின்றன. 

விவசாயப் பேரழிவு

தற்போதைய நெடுஞ்சாலை வழியாக   மேற்சொன்ன ஊர்களுக்கு உள்ள இணைப்பு என்ற உண்மையை இந்த கிரீன் ஃபீல்டு முன்மொழிவு அலட்சியப்படுத்தி விட்டது. மேலும் பரம்பிக்குளம் - ஆழியார் திட்ட கால்வாய் பாசன  பகுதியின் ஊடாக திட்டமிடப்பட்டு முன்மொழியப்பட்டுள்ள கிரீன் ஃபீல்டு சீரமைப்பு என்பது ஒரு பேரளவிலான விவசாயப் பேரழிவாகும். முன்மொழியப்பட்டுள்ள கிரீன் ஃபீல்டு சீரமைப்பு கரூரிலிருந்து காரணம் பேட்டையை அடைகிறது. மற்றும் அரை வட்ட வடிவத்தில் தெற்கில் எட்டிமடையை அடையுமாறும், வடக்கில் மேட்டுப்பாளை யம் ரோட்டில் உள்ள நரசிம்மநாயக்கன் பாளையத்தை அடையுமாறும் அமைந்து ள்ளது. இந்த சுற்று, பகுதி ரிங் ரோடானது 80 கி.மீ.க்கும் மேலான நீளமுடையது. நர சிம்மநாயக்கன்பாளையத்திலிருந்து ரிங் ரோடு அமைப்பாகும் வகையில், முன்மொழியப்பட்டுள்ள மேற்கு பை பாஸ் உடன் இணைக்கப்படுவதாக முன் மொழியப்பட்டுள்ளது. எல்.அண்ட் டி (L&T) பை பாஸ் தற்போது இருப்பதால், ரிங் ரோடின் தெற்கு பகுதி சீரமைப்பு என்பது தேவையற்றது. தற்போது இருக்கும் எல் அண்ட் டி பை பாசை விரிவு படுத்த நிலம் இருந்தும், அறிந்திராத கார ணங்களுக்காக இந்திய தேசிய நெடுஞ்சா லை ஆணையம், விரிவுபடுத்த ஆர்வம் இல்லாதது போல் உள்ளது. 

வடக்குப் பகுதி சீரமைப்பு என்ப தும் சுற்று மற்றும் பயண தூரத்தை அதி கப்படுத்துவது ஆகும். மேலும் அகலப் படுத்தக் கூடியதும், மேட்டுப்பாளையம் ரோடு (NH 67), சத்தி ரோடு (NH 209), மற்றும் அவினாசி ரோடு (NH47) ஆகிய வற்றை இணைக்கக் கூடியதுமான பல கிளை ரோடுகள் உள்ளன. அதனால் கூடுத லாக ஒரு சீரமைப்பு என்பதுதேவையற்றது.  முன்மொழியப்பட்டுள்ள ரிங் ரோடு  சீரமைப்பினால், பயண தூரம் கணிச மாக அதிகமாவதால், ரிங் ரோடுக்கான சுற்று சீரமைப்பு, நகரத்திற்குள் பய ணிப்பவர்களாலோ அல்லது நகரங் களுக்கு இடையே பயணிப்பவர்களாலோ உபயோகப்படுத்தப்படமாட்டாது. ஒரு சீரமைப்பின் மீது, போக்கு வரத்தானது கலைந்து செல்லக் கூடியதாக அமைய வேண்டுமேயன்றி மொத்தமாக குவிவதாக இருக்கக் கூடாது என்பது தான், சிறந்த போக்குவரத்து மேலாண்மை என்று அழைக்கப்படுகிறது. மேட்டுப் பாளையம் ரோடு மற்றும் சத்தியமங்கலம் ரோடு (14க்கும் மேற்பட்ட கிளை ரோடு கள் உள்ளன), சத்தியமங்கலம் ரோடு மற்றும் அவினாசி ரோடு (5 கிளை ரோடு கள் உள்ளன), அவினாசி ரோடு மற்றும் திருச்சி ரோடு (3 கிளை ரோடுகள் உள்ளன), ஆகிய ரோடுகளை இணைக் கும் தற்போதுள்ள கிளை ரோடுகளை மேம்படுத்துவதால் போக்குவரத்தை சீராக கலைந்து செல்ல வைக்கலாம்.

மனிதர் - விலங்குகள் மோதலை அதிகரிக்க வழிவகுக்கும்

முன்மொழியப்பட்டுள்ள நரசிம்ம நாயக்கன்பாளையத்தில் அமைய விருக்கும் மேற்கு பை பாஸ் ரோட்டுடன் ரிங் ரோட்டை இணைப்பதான முன்மொழிவு என்பது, மனித - மிருக மோதல் அதி கரிக்கும் என்பதால் ஒரு பேரழிவாக மாறும். முன்மொழியப்பட்டுள்ள மேற்கு பை  பாசுக்கான சீரமைப்பு என்பது, திட்டம்  ஆரம்பிக்கப்பட்டது முதலே பலமுறை  மாற்றப்பட்டுள்ளது. தற்போதைய சீரமை ப்பும் அறிந்திராத காரணங்களுக்காக சில இடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சீரமைப்பு தற்போது மலைகளோடு ஒட்டியிருப்பதால், இது செயல்படுத்தப் படுமேயானால், மனித - மிருக மோதல் மோசமான முறையில் அதிகமாகும்.  மேலும் முன்மொழியப்பட்டுள்ள மேற்கு பை பாஸ் திட்டத்துக்கு உட்பட்ட பகுதி கள், அடிக்கடி பெரிய அளவில் மீறல்கள் நடக்கக்கூடிய சுற்றுச்சூழல் உணர்வு மிக்கவை. மேற்கு பை பாஸ் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் மற்றும் இந்த சீரமைப்பானது மலைகளிலிருந்து விலகியதாக இருக்க வேண்டும்.  தற்போது முன்மொழியப்பட்டுள்ள ரிங் ரோடானது போக்குவரத்து நெரி சலற்ற தன்மையை ஏற்படுத்த உதவாது என்பதால், இது கைவிடப்பட வேண்டும். தற்போதுள்ள கரூர் - கோயம்புத்தூர் நெடுஞ்சாலை அகலப்படுத்தப்பட வேண்டும் மற்றும் கிரீன் ஃபீல்டு சீரமைப்பு அகற்றப்பட வேண்டும் என்று பி.ஆர். நடராஜன் பேசினார். (ந.நி.)