கொல்கத்தா, ஏப்.16- திரிணாமுல் காங்கிரஸின் வாக்குச்சாவடி கைப்பற்றல், பரவலான வன்முறை யுடன் நடந்த இடைத்தேர்தல்களில் மேற்கு வங்கத்தில் உள்ள போராளிகள் கடும் போட்டியை அளித்துள்ளனர். பாலிகஞ்ச் சட்டமன்றத் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸின் பாபுல் சுப்ரியோ வெற்றி பெற்றபோதிலும் சிபிஎம் வேட்பாளர் சைரா ஷா ஹலீம் 30,971 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். 2021 தேர்தலில் சிபிஎம் வேட்பாளர் டாக்டர். ஃபுவாத் ஹலீம் 8474 வாக்குகளுடன் மூன்றாம் இடம் கிடைத்தது. தற்போது அங்கிருந்து 30,000க்கும் அதிகமான வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்துக்கு சிபிஎம் உயர்ந்துள்ளது. கடந்த முறை இரண்டாவது இடத்தில் இருந்த பா.ஜ.க, இந்த தொகுதியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. கடந்த முறை பாஜக வேட்பாளராக போட்டியிட்ட லோக்நாத் சட்டர்ஜி 31,226 வாக்குகள் பெற்ற நிலையில், இம்முறை அக்கட்சியின் வாக்குகள் 8094 ஆக குறைந்துள்ளது. அசன்சால் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திரிணாமுல் வேட்பாளர் சத்ருகன் சின்கா வெற்றி பெற்றுள்ளார். பாஜக இரண்டாவது இடம் பெற்றது. சிபிஎம் வேட்பாளர் பார்த்தா முகர்ஜி 90,000 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். கடந்த மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மேற்கு வங்காளத்தின் பல பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. மக்களவைத் தேர்தலுக்கு பிறகு ஏற்பட்ட பா.ஜ.க -வின் ஓட்டு சதவிகித வளர்ச்சி, சட்டசபை ேர்தலுக்கு பின், மாநிலத்தில் சரிவடைந்து வருகிறது.