லக்னோ, ஏப்.13- உத்தரப்பிரதேச சட்ட மேலவையில் காலியாக இருந்த 36 இடங்களுக்கு அண் மையில் தேர்தல் நடைபெற் றது. காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் போட்டியிலி ருந்து விலகிக் கொண்ட நிலை யில், பாஜகவுக்கும் சமாஜ் வாதிக்கும் நேரடி போட்டி ஏற் பட்டது. இதில், சமாஜ்வாதி கட்சி யால் ஒன்றில் கூட வெல்ல முடியாத நிலையில், 33 தொகு திகளை பாஜக வென்றது. வார ணாசி, ஆசம்கா், பிரதாப்கா் ஆகிய 3 இடங்களில் சுயேட்சை வேட்பாளா்கள் வென்றனர். சுயேட்சைகள் வென்ற இந்த 3 இடங்களில் ஒன்று, பிரதமர் நரேந்திர மோடியின் சொந்தத் தொகுதியான வார ணாசி என்பதும், இங்கு, பாஜக வேட்பாளர் மூன்றாவது இடத் திற்கு தள்ளப்பட்டு படு தோல்வி அடைந்துள்ளார் என் பதும் பாஜக தலைமையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. மேலும், இங்கு பிரபல தாதாவும் தற்போது சிறையில் இருப்பவருமான பிரஜேஷ் சிங்கின் மனைவி அன்னபூர்ணா சிங் சுயேச்சையாக போட்டி யிட்டு வெற்றி பெற்றிருப்பது அந்த அதிர்ச்சியை அதிக ரிக்கச் செய்துள்ளது. அன்னபூர்ணா சிங்கிற்கு 4,234 வாக்குகள் கிடைத்த நிலையில், பாஜக வேட்பாளர் சுதாமா படேலுக்கு வெறும் 170 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. சமாஜ்வாதி வேட்பாளர் உமேஷ் யாதவ் 345 வாக்குகளைப் பெற்று இரண் டாமிடம் பிடித்துள்ளார். பிரதமர் மோடியின் தொகு தியில், உள்ளூர் தாதா மனை வியிடம் தோற்றது பாஜக-வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.