ரன்தீப் சிங் சுர்ஜேவாலா சாடல்
ரன்தீப் சிங் சுர்ஜேவாலா சாடல் புதுதில்லி, மார்ச் 28 - பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, மார்ச் 31 அன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள் ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியிருப்பதாவது: பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வின் மூலம் ஒன்றிய ஆட்சியாளர்கள், மக்களின் பணத்தை வெட்கமே இல்லாமல் உறிஞ்சி எடுக்கின்றனர். கடந்த 8 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம் மட்டும் ஒன்றிய பாஜக அரசு மக்களிடமிருந்து 25 லட்சம் கோடி ரூபாய் பணத்தை பிடுங்கியுள்ளது. இந்தப் போக்கு நிறுத்தப்பட வேண்டும். இதற் காக, மார்ச் 31 முதல் ஏப்ரல் 7 வரை 3 கட்டங்களாக காங்கிரஸ் போராட்டம் நடத்த உள்ளது. முதற்கட்டமாக மார்ச் 31 காலை 11 மணிக்கு மக்கள் தங்களது வீடு களுக்கு முன்பு திரண்டும், பொது இடத்தில் குழுமியும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். எரிவாயு சிலிண்டர்களுக்கு மாலை போட்டு, மணி அடித்தும் பாஜக அரசின் காது களில் நமது குரல் எட்டும் வகையில் உரத்து முழக்கமிட்டும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். கையில் கிடைக்கும் எந்தப் பொரு ளை வைத்தும் ஒலி எழுப்பலாம். நமது குரல் ஒன்றிய பாஜக அரசின் காதுகளை எட்டும் வகையில் அது இருக்க வேண்டும். இவ்வாறு ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.