states

பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலமே போதுமானது

பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலமே போதுமானது

தில்லியில் கடந்த 2017ஆம் ஆண்டு  பள்ளிக்கு அருகே மரவேலை செய்யும் பட்டறையில் பணியாற்றி வந்த  டோனி என்பவர், 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இந்தச் சம்பவத்தை வெளியில் கூறினால், “சாக்கடையில் தள்ளி மூழ்கடித்து விடுவேன் அல்லது மரக்கட்டையைப் போல் வெட்டிப் போட்டுவிடுவேன்” என மிரட்டியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்து, குற்றவாளியைக் கைது செய்தனர். இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து டோனி  தில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ் குமார் ஓரி குற்றவாளியின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து அவருக்கு விதிக்கப்பட்ட தண்ட னையை உறுதி செய்தார்.  நீதிபதி மனோஜ் குமார் ஓரி தனது தீர்ப்பில், “பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம் நம்பிக்கையூட்டுவதாகவும், நம்பகத் தன்மையுடனும் உள்ளது. ஒரு சம்ப வத்தில் பாதிக்கப்பட்டவர் மட்டுமே ஒரே  சாட்சியாக இருந்தாலும், அவரது வாக்கு மூலம் நம்பகமானதாக இருந்தால், அதன் அடிப்படையிலேயே தண்டனையை உறுதி செய்ய முடியும்” என கூறியுள்ளார்.