புதுதில்லி, பிப்.5- 1951-ஆம் ஆண்டிலிருந்து 2023-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியுடன் ஒப்பிட்டால் வாக்காளர்களின் எண்ணிக்கை 94.50 கோடியாக அதிகரித்துள்ளது. இது கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகம். இருப்பினும் இவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் கடந்த மக்கள வைத் தேர்தலில் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டனர். 1951- ஆம் ஆண்டில், முதல் பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டபோது, இந்தியாவில் 17.32 கோடி வாக்காளர்கள் பதிவு செய்யப் பட்டிருந்தனர், 45.67 சதவீதம் பேர் சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் தங்கள் வாக்குகளை செலுத்தியிருந்தனர். பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை பல ஆண்டுகளாக படிப்படியாக அதிகரித்தது, மேலும் அடுத்தடுத்த தேர்தல்களில் அவர்களின் பங்கேற்பும் அதிகரித்தது. 1957-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 19.37 கோடி. இவர்க்ளில் 47.74 சதவீதம் பேர் தங்கள் பிரதிநிதிகளை மக்களவைக்கு அனுப்புவதற்காக வாக்களித்தனர்.
1962-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 21.64 கோடி வாக்காளர்களில் 55.42 சதவீதம் பேர் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தினர். இதன் மூலம் வாக்களிப் பவர்கள் பங்களிப்பு முதல் முறையாக 50 சதவீதத்தை தாண்டியது. 2009-ஆண்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை 71.70 கோடியாக உயர்ந்தது. ஆனால் வாக்களித்தவர்கள் 58.21 சதவீதம் மட்டுமே. 2014-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது வாக்காளர்கள் எண்ணிக்கை 83.40 கோடி. 66.44 சதவீதம் பேர் வாக்களித்துள்ள னர். 2019-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வாக்காளர்கள் எண்ணிக்கை 91.20 கோடி. இவர்களில் 67.40 சதவீதம் வாக்களித்தனர். வாக்களிக்க வராதவர்கள் 30 கோடி. இந்த 30 கோடி பேரில் நகர்ப்புறங் களைச் சேர்ந்தவர்கள், இளைஞர்கள்- புலம்பெயர்ந்தோர் அடங்குவர். இந்தாண்டு (ஜனவரி 1ஆம் தேதி) மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 94,50,25,694.