சென்னை,ஜூலை 14- பாஜகவுக்கு இனியொரு முறை மக்கள் வாய்ப்பை கொடுத்தால் இந்தியாவும், அரசியல் சட்டமும் தாங்காது என்று திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப் பினர்கள் கூட்டம், வெள்ளிக்கிழமை ( ஜூலை 14) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு; எல்.ஐ.சி முதல் ஏர் இந்தியா வரை யிலான பொதுத்துறை நிறுவனங் களை தனியார் முதலாளிகளுக்கு விற்பதில் ஆர்வம் காட்டுவது. கேஸ் சிலிண்டர் தொடங்கி மூக்குபொடி வரை ஜி.எஸ்.டி. போடுவது; மணிப் பூர் மாநிலமே பற்றி எரிகிறபோது உலகம் சுற்றி அறிவுரை கூறுவது; “அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை போற்றிப் பாதுகாப்ப தற்குப் பதில்”, அதை தகர்த்தெறி யும் பணியை அன்றாட நடவடிக்கை யாக மேற்கொண்டு வருவது; “அரசியல் சட்ட அமைப்புகளின் தன்னாட்சியை கட்டிக் காப்பதற்கு பதில்” அமலாக்கத்துறை, சிபிஐ, மத்திய விழிப்புணர்வு ஆணையம், தேர்தல் ஆணையம், சட்ட ஆணை யம், வருமான வரித்துறை, நீதித் துறை என அனைத்தின் சுதந்திரத்தை யும் பறித்து இந்தியாவின் ஜன நாயக அடித்தளத்திற்கே ஆபத்தை உருவாக்கி வருகிறது. “ஆரோக்கியமான மற்றும் வலுவான ஜனநாயகம்” என்று கூறிவிட்டு - நாடாளுமன்ற ஜனநாய கத்தையே கேலிக் கூத்தாக்குகிறது. அனைவருக்குமான அரசு” என்ற நிலைக்குப் பதில், சிறு பான்மையினரை நசுக்க - அவர்களின் உரிமைகளை பறிக்க பா.ஜ.க. ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் உச்சகட்டமாக, இப்போது பொது சிவில் சட்டத் தைக் கொண்டு வருவோம் என்று தேர்தல் முழக்கத்தில் இறங்கியிருக் கிறார்கள்.
தொழிலாளர்களின் உரிமை களை பறிக்கும் வகையில், தொழி லாளர் நலச் சட்டங்களை, நான்கு சட்டங்களாக ஒருங்கிணைத்து தொழிலாளர்களை வஞ்சிக்கிறார் கள். ஜனநாயக இந்தியா - சமத்துவ இந்தியா- சமூக நீதி இந்தியா - பன் முகத்தன்மையின் பூந்தோட்டமாக இருக்கும் இந்தியாவை பா.ஜ.க. வின் வெறுப்பு மற்றும் சனாதன அரசியலால் இன்று எதேச்சதிகார இந்தியாவாக மாற்ற இன்னொரு முறை வாக்களியுங்கள் என்று விரை வில் பிரதமர் மோடியும் - அவரது சகாக்களும் வரப் போகிறார்கள். நிதி ஆணையத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதி குறைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதலும் தராமல் - நிதியும் அளிக் காமல் இழுத்தடிக்கிறது. ரயில்வே திட்டங்களில் பெரும்பாலும் தமிழ்நாட்டை புறக்கணித்துள்ளது; தமிழக மாணவர்கள் மருத்து வம் படிக்க கூடாது என நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது. இந்தியா வின் புகழை உலக நாடுகள் மத்தி யில் கொண்டு சென்ற சமூக நீதி - சமத்துவம் - மதச்சார்பின்மை - ஜனநாயகம் எல்லாம் இன்றைக்கு பா.ஜ.க. ஆட்சியில் தலை கவிழ்ந்து கிடக்கின்றன. நாட்டின் அரசியல் சட்டம் - அந்த அரசியல் சட்டத்தை நிலைநாட்டும் நீதித்துறை எல்லாம் ஒன்றிய அரசின் வரம்புமீறிய அதிகாரத்திற்கும் - மிரட்டலுக்கும் உள்ளாக நேரிடுகின்றன. இப்படி யொரு சூழலில்தான், ‘அனை வருக்கும் நான் பிரதமர்’ என்ற பிரதமர் , பொது சிவில் சட்டம் என்ற “வெறுப்பு முழக்கத்தை” முன்வைத்துள்ளார்.
எம்.எல்.ஏ. - எம்.பி.க்களை விலைக்கு வாங்கும் கலாச்சாரத் தின் கதாநாயகனாக பாஜக என்ற கட்சியை மாற்றி - பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, வாஜ்பாய் போன்றவர்கள் எல்லாம் வலுப்படுத்திய கட்சித் தாவல் தடைச் சட்டத்தை “காட்சிப் பொரு ளாக்கி” வேடிக்கை பார்க்கிற பாஜக வுக்கு இனியொரு முறை மக்கள் வாய்ப்பை கொடுத்தால் இந்தியா வும் தாங்காது - இந்தியாவிற்காக உருவாக்கப்பட்டுள்ள அரசியல் சட்டமும் தாங்காது. அரசமைப்புச் சட்டத்தில் உள்ள “Socialistic Secular Democratic Republic” (சமதர்ம மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு) என்ற சொல்லையேகூட நீக்கிவிடும் பேராபத்தில் நாமெல்லாம் இருக்கிறோம் என்பதை பதிவு செய்யும் இக்கூட்டம் - வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பா.ஜ.க. அரசால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள வேதனைகளை, தமிழகத்தை - தமிழக மக்களை 9 ஆண்டுகாலம் புறக்கணித்து ஏமாற்றியதை, அவசர அவசரமாக கொண்டுவரத் துடிக்கும் பொது சிவில் சட்டம் உள்ளிட்ட மக்கள் விரோத சட்ட மசோதாக் களை, ஆளுநர்களின் அத்து மீறல்களை, பாஜக ஆட்சியில் ஜனநாயகத்திற்கு - மதச்சார்பின் மைக்கு - சமூக நீதிக்கு - அடிப் படை உரிமைகளுக்கு - மாநில உரிமைகளுக்கு ஏற்பட்டிருக்கும் பேராபத்தை விளக்கிடும் வகையில், திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் உரக்கக் குரல் எழுப்பி, தமிழக மக்களுக்காகவும் - இந்தியாவுக்காகவும் செயல் படுவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.