states

நான் விவசாயி மகன் ; மோடி அரசின் சோதனைகளுக்கு பயப்படமாட்டேன்

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநரான சத்யபால் மாலிக் பாஜகவைச் சேர்ந்தவராக இருந்தாலும், மோடி அரசின் இழிவான அரசியலை கண்டித்து நாட்டு மக்களுக்காக அடிக்கடி குரல் கொடுப்பவர்.

புல்வாமா தாக்குதலுக்கு மோடி அரசே காரணம் உள்ளிட்ட அதிர்ச்சித் தகவல், விவ சாய போராட்டத்துக்கு ஆதரவு கருத்து, வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான சர்ச்சை, மணிப்பூர் கல வரம் என பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு மோடி மற்றும் அவரது ஒன்றிய பாஜக அரசை சத்யபால் மாலிக் தொடர்ச்சியாக விமர்சித்து வந்தார். சிபிஐயை ஏவிவிட்ட மோடி அரசு இதனால் சத்யபால் மாலிக் ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக இருந்த  பொழுது இரண்டு கோப்புகளில் கையெழுத்து போடுவதற்காக பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறி சிபிஐ-யை ஏவிவிட்டது மோடி  அரசு. இந்த விவகாரம் தொடர்பாக தில்லி மற்றும் ஜம்மு-காஷ்மீரின் 8 இடங்களில் கடந்த மாதம் சிபிஐ சோதனை நடத்தியது. இந்நிலை யில், இதன் தொடர்ச்சியாக வியாழனன்றும் சத்யபால் மாலிக்கின் தில்லி இல்லம் உட்பட அவருக்கு தொடர்புடைய 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சத்யபால் மாலிக் மீதான இந்த சிபிஐ சோத னை, மோடி அரசின் அரசியல் பழி வாங்கல் நடவடிக்கை என “இந்தியா” கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பயப்படமாட்டேன் இந்நிலையில், நான் விவசாயி மகன் ; ரெய்டுகளுக்கு பயப்பட மாட்டேன் என சத்யபால் மாலிக்  மோடி அரசிற்கு சவால் விட்டுள் ளார்.  இதுகுறித்து தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் கூறுகை யில், “நான் கடந்த 3-4 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மரு த்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளேன். இருந்தபோதிலும் சர்வாதிகாரியின் வழிகாட்டுதலின் பேரில் அரசு அமைப்புகள் எனது வீட்டை சோதனை செய்கின்றன. எனது ஓட்டுநர், உதவியாளர்கள் சிபிஐ சோதனை செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளனர். நான் ஒரு விவசாயியின் மகன், மோடி அர சின் சோதனைகளுக்கு பயப்பட மாட்டேன். நான் விவசாயிகளுடன் இருக்கிறேன். ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நான் புகார் அளித்தேன். ஆனால் அவர்களைச் சோதனை செய்வ தற்குப் பதிலாக என் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது. எனது 4-5 குர்தா பைஜாமாவைத் தவிர என் வீட்டில் இருந்து உங்களுக்கு எதுவும் கிடைக்காது. சர்வாதிகாரி மோடி அரசு நிறுவனங்களை தவறாக பயன்படுத்தி என்னை பயமுறுத்த முயற்சிக்கிறார். நான் ஒரு விவசாயியின் மகன், நான் பயந்து கும்பிட மாட்டேன்” என்று மற்றொரு பதிவில் கூறியுள்ளார்.  சத்யபால் மாலிக்கின் கருத்து சமூக வலைத்தளங்களில் டாப் டிரெண்டிங்கில் வைரலாகி வருகிறது.