states

img

போதைப் பழக்கத்திற்கு எதிராக கேரளத்தில் நாளை மனிதச் சங்கிலி

திருவனந்தபுரம், அக்.30- திருவனந்தபுரம் நகரில் உள்ள போதைப்பொருள் ஒழிப்பு வலையமைப்பின் மாநில அளவிலான திட்டத்தை  முதல்வர் பினராயி விஜயன் செவ்வாயன்று (நவ.1) தொடங்கி வைக்கிறார். காந்தி பூங்கா முதல் ஐயங்காளி சதுக்கம் வரையிலான ஐந்து கிலோமீட்டர் நீளத்திற்கு அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகளுடன் சுமார் கால் லட்சம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைய உள்ளனர். இதுகுறித்து கேரள உள்ளாட்சித்துறை அமைச்சர் எம்.பி.ராஜேஸ் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மாண வர்களுடன், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பணி யாளர்கள், வணிகர்கள், குடும்பஸ்ரீ பணியாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் மக்களும் பங்கேற்பர். போதைக்கு எதிரான கேரளா போராட்டத்தில் பங்கேற்க அனைவரும் தயாராக இருக்க வேண்டும். போதைப் பழக்கத்தின் கோரப்பிடியில் இருந்து இளை ஞர்களையும் மாணவர்களையும் காப்பாற்றும் இந்தப் போரில் கேரளா வெற்றிபெற முடியும். உலகிலேயே மிகப்பெரிய போதைப்பொருள் எதிர்ப்புப் பிரச்சாரத்தை கேரளா சந்திக்கப் போகிறது. ஒரே நேரத்தில் போதைக்கு எதிராக இவ்வளவு பேர் ஒன்றுபடுவது உலகில் அரிதாக இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார். அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கிய முதல் கட்ட முகாம் நவம்பர் 1ஆம் தேதி நிறைவடைகிறது. நவம்பர் 1 ஆம் தேதி மதியம் 2:30 மணிக்கு, அனைத்து மையங்களி லும் சரியாக மூன்று மணிக்கு போதை ஒழிப்பு சங்கிலி அமைக்கப்படும். சங்கிலி நிறைவடைந்ததும் போதை எதிர்ப்பு உறுதிமொழி வாசிக்கப்படும்.

போதை ஒழிப்பின் அடையாளமாக போதைப் பொருள் எரித்து  புதைக்கப்படும். போதை ஒழிப்பு திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், ஞாயிறன்று போதை எதிர்ப்பு ஊர்வலங் களும், தெருமுனைக் கூட்டங்களும் நடத்தப்படுகின்றன. மலப்புரம் மாவட்டத்தில் பொன்னானி முதல் வழிக்கடவு வரையிலான 83 கி.மீ., திருவனந்தபுரம் மாவட்டத்தில், நகருக்கு வெளியே உள்ள நெடுமங்காடு, கல்லாறு மற்றும் ஆரியநாடு போன்ற மையங்களிலும் பெருந்திரளான மக்கள் பங்கேற்புடன் மனிதச்சங்கிலி அமைக்கப்படும். இதன் ஒரு பகுதியாக, நவம்பர் 1 ஆம்  தேதி எர்ணாகுளத்தில் உள்ள ராஜீவ் காந்தி உள்விளை யாட்டு அரங்கில் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் நட்பு கால்பந்து போட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சூர் மாவட்டம் திருச்சூர் தேக்கின்காட் மைதானத்தில் விரிவான மனிதச் சங்கிலிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவல கப் பணியாளர்கள் அனைவரும் பங்கேற்று ஆட்சியர்  அலுவலக வளாகத்தில் மனிதச் சங்கிலி உருவாக்கப் படும். திருச்சூரில் உள்ள நூலகங்கள் தலைமையில் பொதுமக்கள் பங்கேற்புடன் 46 மனித சங்கிலிகளை உரு வாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கோழிக்கோடு குற்றியாடி, நரிக்கோட்டுச்சல் ஊராட்சிகளில் விரிவான மக்கள் பங்கேற்புடன் மனிதச் சங்கிலிகள் ஏற்பாடு செய்யப்படும். கண்ணூர் மாவட்டம் தர்மடம் பஞ்சாயத்தில் 5000 பேர் பங்கேற்கும் போதை ஒழிப்பு நிகழ்ச்சி நடத்த ப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர் எம்.பி.ராஜேஸ்.