புதுதில்லி, ஏப்.19- இந்தியாவில் கோவிட் இறப்பு களின் எண்ணிக்கை அறிவிக்கப் பட்டதை விட பல மடங்கு அதிகம் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. எனவே, நாட்டின் கோவிட் இறப்பு விகிதத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் எல்.மண்டவியாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் கடிதம் அனுப்பியுள் ளார். நியூயார்க் டைம்ஸ் செய்தி கோவிட் அலையை எதிர்கொள்ள இது அவசியம் என்று கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள் ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ள தாவது:
இந்தியாவின் கோவிட் கொள்கைக்கு எதிராக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி மிகுந்த கவலை அளிக்கிறது. உலக சுகாதார அமைப்பின் அறிக்கை யின்படி இந்தியாவில் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 40 லட்சம் வரை இருக்கும் என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.இந்த அறிக்கையை வெளியிட வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனத்துக்கு (WHO) இந்தியா அழுத்தம் கொடுக் கிறது என்றும் நியூயார்க் டைம்ஸ் குற்றம்சாட்டுகிறது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங் களின்படி, இந்தியாவில் 5.2 லட்சம் கோவிட் இறப்புகள் பதிவாகி யுள்ளன. கடந்த ஜூலையில் வெளி யிடப்பட்ட உலகளாவிய மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விரிவான அறிக்கை ஒரு உதாரணம்.அந்த நேரத்தில் நாட்டில் நான்கு லட்சம் கோவிட் இறப்புகள் இருந்ததாக ஒன்றிய அரசு மதிப்பிட்டுள்ளது. இருப்பினும், அந்த நேரத்தில் இந்தியாவில் 34,50,000 பேர் கோவிட் காரணமாக அரசாங்க மதிப்பீட்டை விட அதிகமாக இறந்திருக்கலாம் என்று அறிக்கை கூறுகிறது. அறிக்கையின்படி, சர்வதேச தரத்தை பின்பற்றினால் இந்தி யாவில் கோவிட் இறப்புகளின் எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டும். இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் (CMIE) ஆய்வு அறிக்கையின் அடிப்படை யில், அந்த நேரத்தில் கோவிட் இறப்பு களின் எண்ணிக்கை 49 லட்சத்தைத் தாண்டியதாக மதிப்பிடப்பட்டு ள்ளது.
‘சயின்ஸ் ஜர்னல் சொல்வது என்ன?’
ஜனவரி 2022 இல், சயின்ஸ் ஜர்னல் இந்தியாவில் கோவிட் கார ணமாக இறந்தவர்களின் எண்ணி க்கை செப்டம்பர் 2021 க்குள் அதி காரப்பூர்வ எண்ணிக்கையை விட ஆறு முதல் ஏழு மடங்கு அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.எடிசனின் நிதியுதவியுடன் 1880 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து இது அறிவியல் ஆராய்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகிறது. லான்செட் சொல்வது என்ன? இதேபோல், மருத்துவ இதழான லான்செட் மார்ச் 2022 இல் இந்தியா வில் கோவிட் இறப்புகள் 40 லட்சத் திற்கும் அதிகமாக இருப்பதாக தெரிவித்தது.இதனால், நாட்டில் கோவிட் இறப்புகளின் எண்ணிக்கை அரசாங்க புள்ளிவிவரங்களை விட அதிகமாக இருப்பதாக பல தகவல்கள் உள்ளன. ஆனாலும், அரசு புள்ளி விவரங்களின் அடிப்படை யில் நாம்செயல்பட்டு வருகிறோம். ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் ஒரு சர்வதேச அமைப்பாக, உலக சுகாதார அமைப்பு பின்பற்றும் வழிமுறைகள் மற்றும் அவற்றின் அறிக்கைகள் மிகவும் தீவிர மாக எடுத்துக்கொள்ளப்படவேண் டும். நமது புள்ளிவிவரங்கள் முதன் மையானவை என்பதை ஒன்றிய அரசு உறுதி செய்யவேண்டும். துல்லியம் மற்றும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யாமல், கோவிட் தொற்றுநோயின் அடுத்த அலைக்கு எதிராக பயனுள்ள மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க முடியாது. இவ்வாறு அந்தக் கடிதத்தில் விளக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், கோவிட் இறப்பு எண்ணிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறும் ஜான் பிரிட்டாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.