5 மாநில தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் இன்று வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தல்கள் நடைபெற்ற நிலையில் கடந்த 137 நாள்களாக சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கிய நிலையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த போதிலும் தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் மோடி அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டது.
தேர்தல் முடிந்த நிலையில் நேற்று டீசல் மொத்த கொள்முதல் செய்யும் நிறுவனங்களுக்கு ரூ.25 உயர்த்தப்பட்டது. இன்று வீட்டு உபயோக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 அதிகரித்து ரூ.967க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் தற்போது பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 102.16-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 77 காசுகள் உயர்ந்து ரூ. 92.19-க்கு விற்பனை செய்யப்படுகிறது.