states

img

உ.பி.யைத் தொடர்ந்து அசாமிலும் ஊர்ப் பெயர்களை மாற்றும் அரசியல்!

கவுகாத்தி, பிப்.17- இஸ்லாமிய அடையாளத்தி லுள்ள ஊர்களின் பெயர்களை இந்து அடையாளத்திற்கு மாற்றும் வெறுப்பு அரசியலை உ.பி. முதல்வர் ஆதித்ய நாத் துவங்கி, பல்வேறு மாநில பாஜக முதல்வர்களும் செய்து வருகின்ற னர். இதில் தற்போது அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா சர்மாவும் இணைந்துள்ளார். அசாம் மாநிலத்தின் கலாச்சாரம், மரபுகளுக்கு ஏற்ப மாநிலத்திலுள்ள நகரங்கள், ஊர்கள், இடங்களின் பெயர்கள் மாற்றப்பட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். கவுகாத்தியில், கடந்த செவ் வாய்க்கிழமையன்று மருத்துவக் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “கலபார் உள்ளிட்ட சில இடங்கள் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள பிற நகரங்கள் மற்றும் கிராமங்களின் பெயர்கள் மாற்றப்படும். ஏனெனில் சில பெயர்கள் மக்கள் உச்சரிக்க வச தியாக இல்லை. சில, சமூகங்களை இழிவுபடுத்துவனவாக உள்ளன” என்று கூறியிருந்தார்.  மேலும், “பெயரில் நிறைய இருக்கிறது. ஒரு நகரம், கிராமத்தின் பெயர் அதன் கலாச்சாரம், பாரம்பரி யம் மற்றும் நாகரிகத்தை பிரதிபலிக்க வேண்டும்” என்று டுவிட்டரிலும் பதி விட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, அசாமில் உள்ள இடங்களின் பெயர்களை மாற்றுவது தொடர்பாக மக்களிடமே பரிந்துரைகளை பெறும் வகையில், தனி இணையதளமும் ஒன்று அசாம் அரசால் தற்போது துவங்கி வைக் கப்பட்டுள்ளது. அசாமிலிருந்த ராஜீவ் காந்தி தேசியப் பூங்காவின் பெயர், கடந்த ஆண்டு செப்டம்பரில், ‘ஒராங் தேசி யப் பூங்கா’ என்று மாற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.