சிம்லா, அக். 5 - பிரதமர் நிகழ்ச்சிக்கு வரும் பத்திரிகையா ளர்கள், நற்பண்புச் சரிபார்ப்பு சான்றிதழ்களை (Character Certificate) சமர்ப்பிக்க வேண்டும் என்று இமாச்சல் பிரதேச பாஜக அரசின் காவல்துறையானது, சுற்றறிக்கை அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது. பிரதமர் மோடி, அக்டோபர் 5-ஆம் தேதி இமாசல பிரதேச மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு திட்டப் பணிகளை துவக்கி வைத்தார். முன்னதாக மோடியின் இந்த சுற்றுப் பயணத்தையொட்டி, பிலாஸ்பூர் மாவட்ட காவல்துறை சார்பில், அனைத்து பத்திரிகை நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் வீடியோ கிராபர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. செப்டம்பர் 29- தேதியிட்ட அந்த முதல் கடிதத்தில் “பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கு வரும் ஊடகவியலாளர்கள், அவர்களின் நற்பண்பு சரிபார்ப்பு சான்றிதழை அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்; பொது க்கூட்டம் மற்றும் நிகழ்ச்சியில் அவர்களை அனு மதிப்பது இந்தச் சான்றிதழை வைத்துதான் தீர்மா னிக்கப்படும்” என்று அந்த சுற்றறிக்கையில் கூறியிருந்தார். அரசாங்கத்தால் நடத்தப்படும் தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோவில் பணிபுரியும் பத்திரிகையாளர்களும் கூட இந்த உத்தரவி லிருந்து தப்பவில்லை.
இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இமாச்சலப் பிரதேச பாஜக அரசு, பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரி வித்தன. இந்த விவகாரம் தேசிய அளவிலும் விவாதமாக மாறியது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட இமாச்சலப் பிரதேச பாஜக அரசின் காவல்துறை “கவனக் குறைவாக வழங்கப்பட்ட அந்தக் கடிதம் வருத்தம் அளிக்கிறது; அது திரும்பப் பெறப்படுகிறது” என்று கூறியதுடன், “நிகழ்வுக்கு அனைத்து ஊடகங்களும் ‘வரவேற்கப்படுகின்றன’ என்றும் அவற்றின் கவரேஜ் எளிதாக்கப்படும்; அரசாங்கத்தின் ஊடகப் பிரிவினால் பரிந்துரைக்கப்படும் அனை வருக்கும் அனுமதிச் சீட்டு வழங்கப்படும்” என புதிய அறிவிப்பை வெளியிட்டது. இமாச்சல் காவல்துறை தலைவர் சஞ்சய் குண்டுவும் தனது டுவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்தார். “அக்டோபர் 5, 2022 அன்று மாண்புமிகு பிரதமரின் இமாச்சலப் பிரதேச பயணத்தை செய்தியாக்க அனைத்து பத்திரி கையாளர்களும் மிகவும் வரவேற்கப்படு கிறார்கள். ஏதேனும் அசவுகரியம் ஏற்பட்டால் வருந்துகிறேன்” என்று அந்த டுவீட்டில் அவர் வெளியிட்டார். இதனால் ஒருவழியாக பிரச்சனை முடிவுக்கு வந்தது.