பெங்களூரு, ஏப்.6- தொழுகைக்கு இஸ்லாமியர்களை அழைக்கும் வகையில், மசூதிகளில் ஒலிபெருக்கிகள் மூலம் ‘ஆசான்’ (azan) ஒலிப்பது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், ஹிஜாப், ஹலா லின் வரிசையில், ‘ஆசான்’ ஒலிப்புக்கும் தடை விதிக்க வேண்டும் என்று இந் துத்துவா மதவெறி அமைப்புகள் தற் போது சர்ச்சையை ஆரம்பித்துள்ளனர். “மசூதிகளில், அதிகமான சப்தத்து டன் ஒலி பெருக்கிகள் (Loud Speakers) பயன்படுத்தப்படுவதை மகாராஷ்டிர அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லா விட்டால் மசூதிகளுக்கு வெளியே ஒலி பெருக்கி வைக்கப்பட்டு அனுமன் பாடல் கள் அதிக ஒலியில் ஒலிக்கப்படும்” என்று அண்மையில், மகாராஷ்டிர நவ நிர்மான் கட்சி (MNS) தலைவர் ராஜ் தாக்கரே மிரட்டல் விடுத்தார். அதன்படியே மும்பை காட்கோபரில் அனுமன் பாடல்களை அதிக சப்தத்துடன் எம்.என்.எஸ் கட்சி யினர் ஒலிபரப்பினர். தற்பேது, கர்நாடக மாநில இந்துத் துவா அமைப்புகளும், ஆசானுக்கு எதி ரான தங்களின் கூப்பாட்டை ஆரம்பித் துள்ளன. மசூதிகளுக்கு போட்டியாக “ஓம் நமச்சிவாயா, ஜெய் ஸ்ரீராம்’ மந்திரங்கள், அனுமன் பாடல்களை ஒலிக்க செய் வது” என்றும், முதற்கட்டமாக பெங்க ளூரு ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து துவங்கும், இந்த கலவரத் திட்டம், பின்னர் மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்தப் படும் என்றும் பஜ்ரங்தள் அமைப்பின் பரத்செட்டி அறிவித்துள்ளார். பிர மோத் முத்தாலிக் தலைமையிலான ஸ்ரீராமசேனா அமைப்பினர், பெலகாவி மாவட்டத்தில் தாசில்தார் உள்ளிட்ட அதி காரிகளிடம் இதுதொடர்பாக மனு அளித் துள்ளனர்.