states

img

கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பலத்த மழை

கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பலத்த மழை

இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு

நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாடு,

கேரளம்,

கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 3 நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கேரளம் கேரள மாநிலத்தில் சனிக்கிழமை முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வட மாவட்டங் களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்  தீர்த்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு  அணைகள் நிரம்பியுள்ளதால், கேரளா மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங் களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திங்களன்று கன மழைக்கு யாரும் உயிரிழக்கவில்லை. ஆனாலும் செவ்வாய்க்கிழமை அன்றும் பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 11 மாவட்டங்கள் அதீத கனமழையை எதிர்கொள்ளும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மும்பை

75 ஆண்டுகளுக்கு பின் முதன்முறை யாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மே  மாதமே தென் மேற்கு பருவமழை தீவிர மடைந்துள்ளது. இதனால் மும்பையில் கனமழை வெளுத்து வாங்கியது. திங்க ளன்று ஒரே இரவில் 10 செமீ அளவில் கனமழை பெய்ததால் மும்பை நகரம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. மும்பை மட்டுமின்றி ஆச்சார்யா அட்ரே சௌக் மற்றும் வோர்லி, அக்வா, மும்பை புறநகர் உள்ளிட்ட பகுதிகள் கன மழையால் இயல்புநிலையை இழந்தன. கனமழை காரணமாக மகாராஷ்டிரா அரசு அனைத்து அரசு ஊழியர்களையும் மாலை 4 மணிக்கு வேலையை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பித்துள்ளது.

கர்நாடகா

கேரளாவைப் போலவே கர்நாடகா விலும் பலத்த மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக தெற்கு கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா, பெலகாவி, தார்வாட், ஹாவேரி, கடக், ஷிவமொக்கா, சிக்கமகளூரு, ஹாசன், குடகு, மைசூரு மற்றும் சாம்ராஜநகர் மாவட்டங்களில் அதீத அளவில் கனமழை பெய்து வருவதால் லேசான அளவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மே 29 வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே போல கோவா, தெலுங்கானா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் மிதமான அளவில் கனமழை  பெய்து வருகிறது.